பிரபல தெலுங்கு கவிஞருக்கு சிறையில் கொரோனா பாஸிட்டிவ்!

Share this News:

மும்பை (16 ஜூலை 2020): ஜனவரி 01, 2008 அன்று நடைபெற்ற கொரேகாவ்ன் பீமா வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய எல்கார் பரிஷத் வழக்கு சம்பந்தமாக பல்வேறு பேராளி மற்று சமூக ஆர்வலர் குழுக்களின் தலைவர்கள் தேசிய பாதுகபப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக பிரபல தெலுங்கு கவிஞர் வாரவர ராவ்-வும் 2018-இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். குறைந்தபட்சம் அவருடைய வயது மூப்பைக் கருத்தில் கொண்டாவது அவரை விடுதலை செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், அவருடைய இடைக்கால ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதற்கு எதிராக அவர் தொடுத்த மேல் முறையீடு மும்பை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது.

தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மயக்கம் மற்றும் மூச்சிரைப்பு காரணமாக அவரை மும்பை ஜேஜே அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். அவருக்கு கொரோனா தொற்று பாஸிட்டிவ் உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


Share this News:

Leave a Reply