புதுடெல்லி (23 டிச 2020); : மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களை வெல்லத் தவறினால் ராஜினாமா செய்வோம் என்று எழுத்துப்பூர்வ உறுதி அளிக்குமாறு பிரசாந்த் கிஷோர் பாஜக தலைவர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.
“வரும் சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 100 க்கும் குறைவான இடங்களே கிடைக்கும். பாஜகவின் வெற்றி அதற்கு மேல் இருந்தால் தான் ட்விட்டரில் இருந்து விலகுவேன்.” என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களை வெல்லும் என்று கூறியதை அடுத்து கிஷோர் இவாறு சவால் விடுத்துள்ளார்.