வெறுப்பைதான் நீங்கள் கைவிட வேண்டும் சமூக வலைதளங்களை அல்ல – மோடிக்கு ராகுல் அட்வைஸ்!

Share this News:

புதுடெல்லி (03 மார்ச் 2020): சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற எண்ணுவதாக தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவுரை வழங்கியுள்ளார்.

நேற்று திடீரென ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, “இந்த ஞாயிற்றுக்கிழமை, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூட்யூப் ஆகிய சமூக வலைதளக் கணக்குகளை விட்டு நீங்கிவிடலாம் என்று யோசிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அதேவேளை “நான் எதுவும் பதிவிட மாட்டேன், உங்களைப் பதிவிட வைப்பேன்” என்றும் கூறியுள்ளார்.

மோடியின் இந்த அறிவிப்பை விமர்சிக்கும் விதத்தில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “பிரதமர் மோடி சோஷியல் மீடியாக்களில் இருந்து வெளியேற வேண்டிய அவசியமில்லை. அவர் தமது வெறுப்பு அரசியலை கைவிட்டாலே போதும்” என்று கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply