கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Share this News:

திருவனந்தபுரம் (09 ஆக 2020) கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.  தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனை அடுத்து இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே  இடுக்கியில் அமைந்திருக்கும் மூணாறு ராஜமலா பெட்டிமுடி பகுதியில் தேயிலை தோட்டப் பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் பலியாகியுள்ளனர். தீயணைப்பு துறையினர் தற்போது அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this News:

Leave a Reply