மாணவர் மீது பயங்கர தாக்குதல்! ஐ.ஐ.டி.இயக்குநர் கைது!

உத்தர்கண்ட் (18 ஜூலை,2020): உத்தர்கண்ட் மாநிலம், ரூர்கீ ஐ.ஐ.டி.யில் பயின்று வந்த நைஜீரியா மற்றும் கானா நாட்டு இரட்டை குடியுரிமை பெற்ற மாணவர் மீதும் அவருடைய சக மாணவர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக ஐ.ஐ.டி. இயக்குநர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொரோனா நெருக்கடியால் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த போதிலும் அந்த மாணவர் அதனையும் மீறி வெளிச் சென்றதால் தனியார் பாதுகாப்பு ஏஜென்சியினர் உதவியுடன் அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கான வீடியோ ஆதாரங்களும் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

இப்ராஹீம் என்ற அந்த மாணவரை கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேற்றுமாறு உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டபோது, அவரைக் குறித்து தூதரகத்தில் புகார் அளிக்குமாறு ஆலோசனை கூறப்பட்டது. ஆனால், அதனை புறந்தள்ளிய ஐ.ஐ.டி. நிர்வாகம் கல்லூரியுடன் தொடர்பில் இருந்த தனியார் பாதுகாப்பு ஏஜென்சி ஒன்றை தொடர்பு கொண்டு, அவ்விரு மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியது. 18 பேர் கொண்ட அந்த தனியார் செக்யூரிடி குழு அவர்களை மூர்க்கத்தனமாகத் தாக்கியது. அப்போது ஏற்பட்ட கைகலப்பில், அவ்விரு மாணவர்களும் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களிலும் செய்தி தளங்களிலும் வெளியாகி பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஆனால் சம்பந்தப்பட்ட மாணவர் இப்ராஹீம் உடைய சகமாணவரான எரிக் கூறும்போது, “இப்ராஹீம் உணவுக்காகவும், செல்ஃபோன் மற்றும் லேப்டாப் பழுதுபார்க்கவும்தான் வெளியே சென்றார். அவுட் பாஸ் பலமுறை கேட்டும் நிர்வாகம்தான் கடந்த மார்ச் மாதத்திலிருந்து அதனை எங்களுக்கு வழங்காமல் இழுத்தடித்தது” என்றார்.

இதன் அடிப்படையில், ஐ.ஐ.டி. இயக்குநர் மற்றும் பதிவாளர் மேலும் தனியார் செக்யூரிடி ஏஜென்சி கள அலுவலர் உட்பட எட்டுபேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தாக்குதலுக்குள்ளான இரு மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஹாட் நியூஸ்:

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...