தாவூத் இப்ராஹிம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ 25 லட்சம் பரிசு!

Share this News:

புதுடெல்லி (01 செப் 2022): நிழல் உலக தாத்தாவும், மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியுமான தாவூத் இப்ராகிம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 25 லட்சம் பரிசு என்று என்ஐஏ அறிவித்துள்ளது.

தாவூத் இப்ராஹிமை கண்டுபிடிக்கும் முயற்சியில் என்ஐஏ முடுக்கிவிடப்பட்டுள்ளது. தாவூத் இப்ராகிம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது.அவரது நெருங்கிய நண்பர் சோட்டா ஷகீல் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்றும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

தாவூத் கும்பலைச் சேர்ந்த அனீஸ் இப்ராகிம், ஜாவேத் சி என்ற ஜாவேத் படேல், மற்றும் டைகர் மேமன் என்கிற இப்ராகிம் முஷ்டாக், அப்துல் ரசாக் மேமன், உள்ளிட்டோர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தலா ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக இந்திய உளவு அமைப்புகள் கணித்துள்ளன.

மும்பை உள்ளிட்ட 29 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது.
இந்த விசாரணையில், தாவூத் மற்றும் அவரது கும்பல் கள்ள நோட்டுகளை கையாள்வதிலும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதிலும் முக்கிய பங்கு வகித்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன.

தாவூத்தை பிடிக்க இந்தியா பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply