லக்னோ (29 ஜன 2022): உத்தரபிரதேசத்தில் பாஜக வெளியிட்டுள்ள புதிய வேட்பாளர் பட்டியலில் பிராமணர்களுக்கு அதிக இடங்கள் வழங்கப்பட்டுள்ளது.
91 வேட்பாளர்கள் கொண்ட பாஜக பட்டியலில் 21 பிராமண வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அதே சமயம் பல்வேறு சமூகங்களும் பாஜகவை கைவிட்டு வருகின்றன.
விவசாயிகள் போராட்டத்தை அடுத்து பாஜகவுக்கு எதிராக பல சமூகங்கள் ஒன்றிணைவதும் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. ஜாட் சமூகம் பாஜகவில் இருந்து விலகி நிற்கிறது. இதனால் 200 ஜாட் தலைவர்களை அழைத்து பாஜக விவாதித்தது.
ஆர்.எல்.டி.யை பா.ஜ.க.வுடன் நெருக்கமாகக் கொண்டுவருவதுதான் அடுத்த முடிவு. ஆனால் ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி இதற்கு தயாராக இல்லை. தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதற்காக அமித்ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் உத்திர பிரதேசத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.