குடியரசுத் தலைவர் மாளிகை மூத்த காவல்துறை அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு!

Share this News:

புதுடெல்லி (17 மே 2020): குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர் (ஏசிபி)க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஜனாதிபதி மாளிகை பணியாளர்கள் உட்பட பலர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம், ராஷ்டிரபதி பவன் வளாகத்தில், அங்குள்ள ஒரு ஊழியரின் உறவினர் கொரோனா வைரஸ் பாதிக்கபப்ட்டிருந்தது. இதனை அடுத்து குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள 115 வீடுகளில் உள்ளவர்கள் தனினைப் படுத்தப்பட்டனர். எனினும் அதனை தொடர்ந்து யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர் (ஏசிபி)க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு பலரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ள்னர்.

இவ்விவகாரம் டெல்லி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News: