டெல்லியில் தோல்வி அடைந்தும் திருந்தவில்லையா? – மோடிக்கு உத்தவ் தாக்கரே அட்வைஸ்!

Share this News:

மும்பை (18 பிப் 2020): “குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறப் போவதில்லை என்று திரும்ப திரும்பகூறுவதால் கைதட்டல் கிடைக்கலாம் ஆனால் ஓட்டு கிடைக்காது” என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் பேசிய பிரதமர் மோடி, “எத்தனை அழுத்தங்கள் வந்தாலும், சிஏஏ, காஷ்மீர் மீதான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது குறித்து திரும்ப திரும்பபெறப்போவதில்லை” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, ” நாட்டில் பல விவகாரங்கள் உள்ளன. அதில் கவனம் செலுத்துங்கள். எங்கு சென்றாலும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. இதனால் கைதட்டல் வேண்டுமானால் கிடைக்கலாம் ஓட்டு கிடைக்காது. டெல்லியில் நீங்கள் இதையேதான் சொன்னீர்கள் இறுதியில் கிடைத்த பலன் என்ன? .

உங்கள் திட்டங்களை மாற்ற சொல்லவில்லை. ஆனால் மக்களுக்கு சொன்ன பல வாக்குறுதிகளை நீங்கள் நிறைவேற்றவில்லை அதில் கவனம் செலுத்துங்கள். காஷ்மீரில் தொழில் மற்றும் வியாபாரத்தை பெறுக்குவோம் என்றீர்கள் அவை என்ன ஆயிற்று?” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே குடியுரிமை சட்டம் குறித்து மகாராஷ்டிர மக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும், என்.ஆர்.சியை மகாராஷ்டிராவில் அமல்படுத்தமாட்டோம் என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply