திரிணாமுல் காங்கிரசின் நிலைப்பாடு பஜகவுக்கே சாதகம் – சிவசேனா!

புதுடெல்லி (10 ஜன 2022): கோவா சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசின் நிலைப்பாடு பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று சிவசேனா விமர்சித்துள்ளது.

“கோவா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து நம்பிக்கையற்ற தலைவர்களை தன் பக்கம் இழுத்துள்ளது. இது ஏற்புடையதல்ல” என்று சிவசேனாவின் முகப்புத்தகமான சாம்னாவில் சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.

சட்டசபைத் தேர்தலுக்காக கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் அதிக அளவில் செலவு செய்வதாகவும், அக்கட்சி செலவழித்த நிதி எங்கிருந்து வந்தது என்றும் பலர் கேட்கிறார்கள் என்றும் ராவத் அதில் கூறியுள்ளார்.

மேலும் அந்தக் கட்டுரையில், கோவாவின் தற்போதைய நிலவரத்தைக் காரணம் காட்டி அனைத்து கட்சிகளும் அந்த மாநிலத்தை அரசியல் ஆய்வகமாக மாற்றிவிட்டன. சென்ற தேர்தலில் 17 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளதாகவும், தற்போது வெறும் 2 இடங்களுக்கு மட்டும் தான் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கோவாவில் ஆளும் பாஜக வெற்றி பெறுவது எளிதல்ல என்றும், ஆம் ஆத்மி மற்றும் டிஎம்சி வெற்றி பெறுவது எளிதல்ல என்றும், பாஜகவுக்கு உதவுவதற்காக காங்கிரஸின் வெற்றிப் பாதையை பிற கட்சிகள் தடுக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

கோவாவில் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ், கோவா பார்வர்ட் கட்சி (ஜிஎஃப்பி), மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி (எம்ஜிபி), ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி), திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (டிஎம்சி) மற்றும் என்சிபி ஆகிய முக்கிய அரசியல் கட்சிகள் களத்தில் உள்ளன.

ஹாட் நியூஸ்:

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...