காங்கிரசுக்கு புதிய தலைவர் – பரபரப்பான சூழ்நிலையில் சோனியா காந்தி இன்று ஆலோசனை!

Sonia Gandhi
Share this News:

புதுடில்லி (19 டிச 2020): : காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்தும், கட்சி விவகாரங்கள் குறித்தும், கட்சியின் மூத்த தலைவர்களுடன், கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா ஆலோசனை நடத்தினார்.

காங்கிரஸ் கட்சி வரும் ஜனவரியில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், கட்சியின் தலைவராக ராகுலை ஒரு மனதாக தேர்ந்தெடுக்க, சோனியா விரும்புகிறார். இதையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்களுடனும், அதிருப்தி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த, அவர் திட்டமிட்டுள்ளார்.

முதல் கட்டமாக, டில்லியில், கட்சியின் தலைமை அலுலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. சோனியா ஏற்பாடு செய்த கூட்டத்தில், ராகுல், ஏகே அந்தோணி, அசோக் கெலாட், அம்பிகா சோனி, ப.சிதம்பரம் ஆகியோரும், அதிருப்தி தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, விவேக் தன்கா, சசிதரூர், மணிஷ் திவாரி, பூபேந்தர் சிங் ஹூடா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.


Share this News:

Leave a Reply