காஷ்மீர் ஹுரியத் மாநாடு கூட்டமைப்பு தலைவர் சையது அலி ஷா கிலானி திடீர் விலகல்!

Share this News:

ஜம்மு (29 ஜூன் 2020): காஷ்மீர் அனைத்து ஹூரியத் மாநாடு கூட்டமைப்பிலிருந்து அதன் தலைவர் சையது அலி ஷா கிலானி அவ்வமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும் என்பதை கொள்கையாக கொண்ட 26 பிரிவினைவாத இயக்கங்களின் கூட்டமைப்பு அனைத்து ஹூரியத் மாநாடு. இதன் தலைவராக இருந்து வந்தவர் சையது அலி ஷா கிலானி.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு நீக்கியது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டது. இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு உள்ளபோதிலும் மத்திய அரசு தன் நிலையிலிருந்து பின்வாங்கவில்லை.

இந்நிலையில் வீட்டுக்காவலில் உள்ள சையது அலி ஷா கிலானி அனைத்து ஹூரியத் மாநாடு கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


Share this News: