நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன் விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க ஒன்றிய அரசு முடிவு!

Share this News:

புதுடெல்லி (21 நவ 2021): விவசாயிகள் போராட்டத்தை, பார்லிமென்ட் கூட்டத்தொடருக்கு முன் தீர்த்து வைக்க, ஒன்றிய அரசு முயற்சியில் உள்ளது.

அடுத்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், விவசாய சட்டத்தை ரத்து செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம். நாளைக்குள் மசோதா தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு, கூட்டு கிசான் மோர்ச்சாவின் முக்கியமான கூட்டம் இன்று நடைபெறுகிறது. பிரதமரின் அறிவிப்பு மற்றும் போராட்ட வழிமுறைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் சட்டத்தை வாபஸ் பெறாமல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பெரும்பாலான விவசாயிகள் அமைப்புகள் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The Center is ready to settle the farmers’ strike before the Parliament session. The next Union Cabinet meeting may approve the bill to repeal the Agrarian Act. The bill is expected to be ready by tomorrow.


Share this News:

Leave a Reply