கொல்கத்தா (13 டிச 2020): தேர்தலில் தோல்வியை சந்தித்தால் பாஜகவினர் மேற்கு வங்க முதல்வர் மம்தாவை கொலை செய்யக் கூட தயங்க மாட்டார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் சுப்ரதா முகர்ஜி தெரிவித்துள்ளர்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் மேற்கு வங்காளத்தில் அமைதியை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. ஜே.பி.நட்டாவின் கார் மீது தாக்குதல் நடத்தியது பாஜக சதி என்றும் அது குறித்து விசாரிக்கப்படும் என்றும் சுப்ரதா முகர்ஜி கூறினார்.
கடந்த வாரம் மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாஜக தலைவர் ஜே..பி நட்டா வாகனம் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.