புதுடெல்லி (13 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை சீரடையும் வரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 64 பேர் இந்தியர்கள். 16 பேர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் கனடா நாட்டு குடிமகன்.
இந்த 81 பேருடன் தொடர்பில் இருந்தவர்களையும் மத்திய சுகாதாரத்துறை கண்டுபிடித்து, அவர்களையும் கண்காணித்து வருகிறது. இதன் அடிப்படையில் சுமார் 4 ஆயிரம்பேரின் உடல்நிலை ஆய்வு செய்யப்படுகிறது.
கொரோனா பாதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 42,296 பயணிகளிடம் மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டது. இதில் 2,559 பேருக்கு கொரோனா தாக்கியதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. அவர்களில் 17 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 522 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள்.