பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே சவால்!

Share this News:

மும்பை (26 அக் 2020): துணிவிருந்தால் எங்கள் அரசை கவிழ்த்துப் பாருங்கள் என்று பாஜகவுக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சவால் விட்டுள்ளார்.

சிவசேனா கட்சியின் சார்பில் தசரா பேரணி மும்பை தாதர் பகுதியில் சிறிய அரங்கில் நேற்று நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக மிகப்பெரிய அளவில் சிவாஜி பார்க்கில் திறந்த வெளியில் நடத்தப்படாமல் சிறிய அளவிலேயே நடத்தப்பட்டது. இந்த தசரா பேரணியில் சிவசேனா தலைவரும், மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது: எனது அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் முதல் அமைச்சராக பொறுப்பேற்ற போது இந்த அரசு விரைவில் கவிழ்ந்து விடும் எனக்கூறினர். நான் அவர்களுக்கு சவால் விடுக்கிறேன். துணிவிருந்தால் எனது அரசை கவிழ்த்து பாருங்கள்.

முன்பெல்லாம், மாற்றுக் காரணி ஏதும் இல்லை (மோடிக்கு மாற்று) என்ற சூழல் இருந்தது. ஆனால், இப்போது உங்களைத் தவிர்த்து வேறு யார் வேண்டுமாலும் செய்வார்கள் என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்” என்றார்.


Share this News:

Leave a Reply