விவசாயிகள் போராட்டத்தால் திணறும் மத்திய அரசு!

Share this News:

புதுடெல்லி (28 நவ 2020): வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்வதால் மத்திய அரசு செய்வதறியாது திணறி வருகிறது.

நேற்று முன் தினம் தொடங்கிய விவசாயிகளின் போராட்டம் மூன்றாம் நாளாக தீவிரமாக தொடர்ந்து வருகிறது. அரசு தீர்மானிக்கும் இடத்தில் போராடுவதால் எந்த பயனும் இல்லை என்றும், தேசிய நெடுஞ்சாலையிலேயே வேலைநிறுத்தம் தொடரும் என்றும் விவசாயிகள் தீர்மானமாக உள்ளனர். இதனால் சிங்கூரில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்க அதிகமான விவசாயிகள் டெல்லியை நோக்கி விரைந்துள்ளனர். அதே நேரத்தில், காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையை மூடிவிட்டு அங்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

ஒரு பிரிவு இங்கே போராட்டம் தொடரும் என்றும் மோடி அரசு இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

மறுபுறம், டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகளின் வேலைநிறுத்தத்தைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. எல்லைச் சாலைகள் மூடப்பட்டு ஒரு பெரிய படைப்பிரிவு நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை புராடியில் ஒரு பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.


Share this News:

Leave a Reply