துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாசிட்டிவ்!

Share this News:

ஐதராபாத் (24 ஜன 2022): துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெங்கையா நாயுடு ஒரு வாரம் தனிமைப்படுத்தலில் இருப்பார் என்று துணை ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார்.

நாயுடுவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மூலம் அவருக்கு கொரோனா இருக்கும் செய்தியை உறுதிப்படுத்தினார்.

மேலும் அண்மைய நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Share this News:

Leave a Reply