துபாய் (13 ஜூலை 2021): இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான பயணிகள் விமானத் தடை, எதிர்வரும் ஜூலை 21 வரை தொடரும் என்பது உறுதி படுத்தப் பட்டுள்ளது.
ஜூலை 21 க்குப் பிறகு ஜூலை 22 முதல் நிபந்தனைகளுடன் விமான சேவையை மீண்டும் தொடங்கப் படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் இதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் அதிகாரிகள் தரப்பில் இருந்து இதுவரை கிடைக்க வில்லை
இந்தியாவுடன் சேர்த்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை நாடுகளுக்கும் அமீரகத்தின் இந்தத் தடை தொடர்கிறது.
இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட் அதிகாரிகளின் முன் அனுமதியுடன், இந்தியாவில் சிக்கித் தவித்த சுகாதார ஊழியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்தனர்.
கடந்த மூன்று மாதங்களாக இந்தியாவில் சிக்கித் தவித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்கள் குழு ஐக்கிய அரபு அமீரகம் திரும்பியுள்ளது குறிப்பிடத் தக்கது.