இந்தியாவிற்கு விடுமுறையில் சென்றவர்களுக்கு சவூதி இந்திய தூதரகத்தின் முக்கிய தகவல்!

Share this News:

ரியாத் (26 மே 2021): சவுதியிலிருந்து விடுமுறையில் சென்ற இந்தியர்கள் இந்தியாவில் தடுப்பூசி பெறும்போது ஆதார் எண்ணுக்கு பதிலாக பாஸ்போர்ட் எண்ணை ஆவணமாக சமர்ப்பிக்குமாறு சவூதி இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய தூதர் டாக்டர். அவுசஃப் சயீத் கூறுகையில், இந்தியாவில் தடுப்பூசி பெறும்போது ஆதார் எண்ணை ஆவணமாக சமர்ப்பிக்கும் நிலை உள்ள நிலையில் அதற்கு பதிலாக பதிவு செய்ய பாஸ்போர்ட் எண்ணை வழங்குவதன் மூலம், சவுதி அரேபியாவுக்கு வருவதற்கான தொழில்நுட்ப சிக்கல்கள் தவிர்க்கப்படும். என்றார்

மேலும் இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே விமான போக்குவரத்தை தொடங்க உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாகவும், இந்தியாவில் கோவிட் வழக்குகள் அதிகரிப்பதன் காரணமாக தற்போதைய தடை இருப்பதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

சவூதி வாழ் இந்தியர்களுடன் ஆன்லைன் உரையாடலில், இந்திய தூதர் டாக்டர். அவு சஃப் சயீத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். சவூதி அரேபியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் விமான சேவையைத் தொடங்குவது குறித்து தூதரகம் சவுதி அமைச்சகங்கள் மற்றும் சவுதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்துடன் கலந்துரையாடியதாகவும் தூதரகம் தெரிவித்தது.

தற்போதைய சூழ்நிலையில், சவுதி அரேபியாவுக்கு வருபவர்கள் கோவிட் 19 தடுப்பூசியை கட்டாயம் பெற வேண்டும்.சவுதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட தடுப்பூசி பெறாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியிருக்கும். இந்தியாவில் வழங்கப்படும் கோவ்ஷீல்ட் மற்றும் அஸ்ட்ரா செனெகாவும் ஒன்றுதான் என்பதில் சவூதி அதிகாரிகள் உறுதியாக இருப்பதாகவும், எனவே கோவ்ஷீல்ட் எடுத்துக் கொண்டவர்கள் இந்தியா வருவதில் சிக்கல் இருக்காது என்றும் இந்திய தூதர் கூறினார்.


Share this News:

Leave a Reply