ஐக்கிய அரபு அமீரகம் – இந்தியா பயணத் தடை மேலும் நீட்டிப்பு!

Share this News:

துபாய் (30 மே 2021): இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்காண பயண தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது . இது ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சுற்றறிக்கை சம்பந்தப்பட்ட பயண முகவர் நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலையை தொடர்ந்து ஏப்ரல் 25 முதல் இந்தியாவில் இருந்து பயணிகள் விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்தது.

இந்நிலையில் இந்தியாவில் கோவிட் விகிதங்கள் வீழ்ச்சியடைந்து வருவதால் ஐக்கிய அரபு அமீரகம் தனது பயணத் தடையை நீக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பயணத் தடையை ஜூன் 30 வரை நீட்டித்து எமிரேட்ஸ் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட் சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவின் உத்தரவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தடை ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply