புனித மக்காவில் உம்ரா யாத்திரைக்கு வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அனுமதி!

Share this News:

மக்கா (02 அக் 2020): வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் மக்காவிற்கு உம்ரா யாத்திரீகர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சவுதி அரேபியாவின் புகழ்பெற்ற மக்கா தலத்திற்கு யாத்ரீகர்கள் வரத் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஏழு மாதங்களாக இந்த தடை அமலில் இருந்து வரும் நிலையில், அக்டோபர் 4ஆம் தேதி முதல் மீண்டும் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவிருக்கிறது.

மூன்று கட்டங்களாக யாத்ரீகர்களுக்கு தடை விலக்கப்படவிருக்கிறது. முதல் கட்டமாக சவுதி அரேபிய குடிமக்கள் மற்றும் நாட்டிற்குள் வசிப்பவர்கள் 6,000 பேருக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும்.

யாத்ரீகர்களிடையே பாதுகாப்பையும், தனிமனித இடைவெளியையும் உறுதிசெய்வதற்காக சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அனுமதியளிக்கப்படும். ஞாயிறு அன்று (அக்டோபர் 4) யாத்ரீகர்கள் புனித காபாவை தரிசிக்க அனுமதி அளிக்கப்படும்.

அக்டோபர் 18ஆம் தேதியன்று ஒரு நாளைக்கு 15,000 பேருக்கு அனுமதியளிக்கப்படும். அதன்பின் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 40,000 யாத்ரீகர்களுக்கு அனுமதியளிக்கப்படும்.

நவம்பர் 1ஆம் தேதி முதல் வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கும் அனுமதியளிக்கப்படும். கொரோனா பிரச்சினை முழுவதுமாக தீர்ந்த பிறகே முழு வீச்சில் உம்ரா பயணம் அனுமதிக்கப்படும் என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா செல்ல தற்போது தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.as


Share this News:

Leave a Reply