துபையில் செயல்பட்டு வரும் மெட்ரோ துரித தொடர்வண்டிச் சேவை கின்னஸ் உலக சாதனையில் இடம் பெறுகிறது.
துபையில் மெட்ரோ துரித தொடர்வண்டி சேவை நடைபெற்று வருகிறது. ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் இந்த மெட்ரோ சேவை 75 கிலோ மீட்டர்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. சிகப்பு மற்றும் பச்சை வழி என இரண்டு வழிகளில் இந்த சேவை இயங்கி வருகிறது. சிகப்பு வழி 52 கிலோமீட்டர்களுக்கும் பச்சை வழி 22.69 கிலோமீட்டர்களுக்கும் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு செயல்படும் இந்த மெட்ரோ சேவை உலகத்தின் நீளமான ஆளில்லாத மெட்ரோ என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது. இதற்காக கின்னஸ் உலக சாதனையில் இது இடம் பெறுகிறது. கின்னஸ் சான்றிதழை கின்னஸ் மத்திய கிழக்கின் பிராந்திய இயக்குனர் தலால் உமர், துபை சாலை மற்றும் போக்குவரத்து அதிகாரத்தின் தலைவர் மட்டார் அல் தாயிரிடம் வழங்கினார்.
இந்த பெருமையினை அமீரகத்தின் பிரதமரும் துபை அதிபருமான ஷேக் முஹம்மதுக்கு சமர்ப்பிப்பதாக மட்டார் அல் தாயிர் தெரிவித்துள்ளார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
கின்னஸ் உலக சாதனையில் துபை மெட்ரோ
Comments
CARGO AMEEN
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed