குவைத்தில் நடந்த தேர்தலில் எதிர்கட்சி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
குவைத்தில் 50 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் 34 இடங்களை இஸ்லாமிஸ்ட் தலைமையிலான எதிர்க்கட்சி கைபற்றி அமோக வெற்றி ஈட்டியுள்ளது. ஆளும் கட்சியிலுள்ள 13 எம்பிக்கள் மீது எழுப்பப்பட்ட ஊழல் புகாரின் காரணமே ஆளும் கட்சியின் படு தோல்விக்குக் காரணம் என தெரிகிறது.
ஊழல் புகார்கள் மிகுந்ததைத் தொடர்ந்து பிரதமருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது குறிபிடத்தக்கது.
- அதிரை ஹஸன்
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
குவைத்தில் எதிர்கட்சி வெற்றி!