குஜராத் மாநிலத்திலுள்ள கோவில் ஒன்றில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற விழா கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத்திலுள்ள ஜூனாகட் மாவட்டம் பாவ்நாத் கோவிலில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. இந்த விழா கண்காட்சியில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. திடீரென கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து செய்தியறிந்த குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 1 லட்ச ரூபாய் நஷ்டஈடு அறிவித்ததோடு, உயர் மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
குஜராத் கோவில் கூட்ட நெரிசலில் 6 பேர் பலி!