இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையில் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் மற்றும் மீனவர் அடையாளத்தை உறுதிப்படுத்த மும்பை போலீசார் கன்னியா குமரி புறப்பட்டுச் சென்றனர்.
அமெரிக்காவின் பிரபல வாரப் பத்திரிகையான 'டைம்' பத்திரிகை, இந்தியாவின் பாராளுமன்ற தேர்தலில் ப.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப் படுவார் என, அட்டை படத்துடன்கூடிய கவர் ஸ்டோரியில் விளக்கியுள்ளது.
திருவனந்தபுரம் - கேரள மாநிலத்தில் பிறவம் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 86.3 சதவிகித வாக்குகள் பதிவாகின. இது முன்புள்ள வாக்குப்பதிவுகளை விட மிக அதிகமாகும்.
டில்லி - டில்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகில், ஏறத்தாழ 25 வயது உடைய ஒரு பெண்ணின் சடலம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு கோணியில் ஏழு துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் அந்த சடலம் இருந்தது.

கொல்கத்தா : ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணங்களை உயர்த்தியதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சார்ந்த ரயில்வே அமைச்சர் திரிவேதி பதவி விலக வேண்டுமென்ற மம்தா பானர்ஜியின் கோரிக்கைக்கு, அவர் எழுத்து மூலம் தான் பதவி விலக வேண்டுமென்று வேண்டினால் மாத்திரமே பதவி விலகுவேன் என்று ரயில்வே அமைச்சர் திரிவேதி கூறியுள்ளார்.

புது தில்லி : மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி 2012 - 13 ஆம்ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட்டின் சாதக, பாதகங்களை பற்றிய ஆழமான விமர்சனங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்,இந்நேரம் வாசகர்களுக்காக ஒரு சாமானியனை இப்பட்ஜெட் எந்த அளவு பாதிக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் பொருட்டு பட்ஜெட்டுக்கு பின் எப்பொருட்களின் விலை உயரப் போகிறது, எப்பொருட்களின் விலை குறைய போகிறது என்பதை பார்ப்போம்.
மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது நிதிநிலை அறிக்கை கூட்டத்தை திமுக புறக்கணிப்பதாகக்கூறி அக்கட்சியைச் சார்ந்த மத்திய அமைச்சர்கள் அவையிலிருந்து வெளியேறினர்.
நடிகை ரஞ்சிதாவுடனான படுக்கையறை லீலைகள் வீடியோவாக அம்பலமானதைத் தொடர்ந்து பிரபலமான சுவாமி நித்தியானந்தா திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியுடன், நாத்திகமா, ஆத்திகமா என்று விவாதம் செய்ய தயாராக இருப்பதாக சவால் விடுத்துள்ளார்.
கடந்த 2 மாதமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய பெண் குழந்தை ஃபாலக் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தது.
மும்பை : தொலைக்காட்சியில் தன்னுடைய டாக் ஷோக்களால் அமெரிக்காவில் பிரபலமான ஒபரா வின்ப்ரேவை போல் இந்திய தொலைக்காட்சிகளில் குறிப்பாக இந்தி தொலைக்காட்சிகளில் தன்னுடைய பாலாஜி டெலிபிலிம்ஸ் மூலம் ஏராளமான தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் பிரபலமான ஏக்தா கபூர் கடவுள் ஒரு பெண்ணாகவே இருப்பார் என தாம் நம்புவதாக தெரிவித்தார்.
டெல்லி ஜனாதிபதி மாளிகை ஊழியரான 51 வயது பெண்மணி ஒருவர் வியாழனன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். உடல்நிலை காரணமாக அவர் மன உளைச்சலுற்றிருந்தார் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லி : 2ஜி அலைகற்றை ஊழல் விவகாரத்தில் ஏர்செல் – மேக்ஸிஸ் பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரிதுறை ஆணையம் தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறனுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

உத்தரப் பிரதேச முதல்வராக சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் இன்று வியாழக்கிழமை பதவியேற்றார்.இவருக்கு ஆளுநர் ஜோஷி அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது ஆட்சியைத் தொடருவதற்கு எந்தவித உரிமையும் அற்றது என பஞ்சாப் மாநில முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள பிரகாஷ் சிங் பாதல் கூறியுள்ளர்.
மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி ரயில்வே பட்ஜெட்டை மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். 10 வருடங்களுக்குப் பிறகு பயணிகள் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
உத்தரகாண்ட் சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 32 தொகுதிகளில் வெற்றி பெற்று 4 சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகக் கடந்த பதினோராண்டுகளாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி விரும் ஐரோம் ஷர்மிளாவைத் தற்கொலை முயற்சி எனக்குற்றம் சுமத்தி மீண்டும் கைது செய்தது அம்மாநிலக் காவல்துறை.
Page 13 of 31