திருப்பதி கோவிலுக்கு வரும் பெண்கள் இறுக்கமான ஆடை அணியக்கூடாது என்றும் மீறி இறுக்கமான ஆடை அணிந்து கோவிலுக்கு வந்தால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கடந்த சில ஆண்டுகளாக திருப்பதி கோவிலுக்கு வரும் சில பெண்கள் இறுக்கமான பேண்ட் - டி சர்ட் மற்றும் துப்பட்டா இல்லாமல் சுடிதார் போன்ற ஆடைகளை அணிந்து வருகின்றனர். இனிமேல் இது போன்று ஆடை அணிந்து வந்தால் அவர்கள் கோவிலுக்குள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இனி திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பெண்கள் சேலை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதாரில்தான் வர வேண்டும்.
அதேபோன்று ஆண்கள் லுங்கியில் வரக்கூடாது. கண்டிப்பாக வேட்டி-சட்டை அல்லது பேண்ட்-சட்டை அணிந்து தான் வரவேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த ஆடைக்கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது அதை தீவிரமாக செயல்படுத்த இருக்கிறோம். ஆடைக் கட்டுப்பாட்டை மீறுபவர்களைக் கோவிலில் இருந்து வெளியேற்றுவோம்."
மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
திருப்பதியில் பெண்கள் இறுக்கமான உடை அணிய தடை!
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed