இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா கர்நாடகா முதல்வரின் உதவியாளர்கள் சம்பளம் மாதம் 70 இலட்சம் தான் !

கர்நாடகா முதல்வரின் உதவியாளர்கள் சம்பளம் மாதம் 70 இலட்சம் தான் !

பெங்களூர் : கர்நாடகாவில் எடியூரப்பாவின் பதவி விலகலுக்கு பின் முதல்வராக பணிபுரியும் சதானந்தா கவுடாவின் உதவியாளர்களின் சம்பளம் மாத்திரம் 70 இலட்சம் எனும் அதிர வைக்கும் தகவல் வெளி வந்துள்ளது.

ஊழலற்ற நிர்வாகம், எளிமையான ஆட்சி எனும் தாரக மந்திரத்துடன் ஆட்சி புரியும் பாஜகவின் முதல்வர் சதானந்தா கவுடாவுக்கு எத்துணை உதவியாளர்கள்,அவர்களின் சம்பளம் எவ்வளவு என்ற விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் கேட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த ஆணையம் முதல்-மந்திரி சதானந்தாவுக்கு 287 உதவியாளர்கள் இருப்பதாகவும் இவர்களில் 237 பேர் தலைமைச் செயலகம் அமைந்துள்ள விதான சவுதா கட்டிடத்தில் பணிபுரிகிறார்கள் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.

21 பேர் முதல்- மந்திரியின் வீட்டிலும், 29 பேர் முதல்-மந்திரியின் அலுவலக இல்லமான “கிருஷ்ணா”விலும் வேலைக்காரர்களாக பணிபுரிகிறார்கள். மொத்தம் 287 பேருக்கும் சம்பளம் மாத்திரம் மாதந்தோறும் ரூ. 70 லட்சம் செலவிடப்படுகிறது.

இவர்களில் முதல்வரின் மூன்று தனி செயலர்கள் மாத்திரம் குறைந்தது 1 இலட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Comments  

 
0 # Warrant Balaw - Law Researcher, Writer 2012-02-19 08:27
மக்களின் ஊழியர்களுக்கு, ஊழியர்கள் என்ற நிலையை தகர்த்து, மக்களூழியர்களையே நேரடியாக கடமையாற்ற செய்ய வேண்டும்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # N.S.M.Shahul Hameed 2012-02-19 13:45
RTI information முதல்வரின் அலுவலகப் பணியாளர்களாக இருக்கும் அரசு ஊழியர்களையும் கணக்கில் சேர்த்து இந்த அறிக்கை தந்திருக்கிறது என்று நினைக்கிறேன். முதற் கட்டமாக அரசு சேவைகள் (அரசு - அரசு; அரசு - மக்கள்; அரசு - மற்ற (வர்த்தக) அலுவலகங்கள்) அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக கணினிமயமாக மாறினால், ஊழியர்களை வேறு பணிகளுக்கு அனுப்பிவிடலாம். பாது காப்பு காரணங்களுக்காக ஒரு சிலர் வைத்திருப்பது தவிர்க்க முடியாதது. துணை ஊழியர்கள் இல்லாமல் சேவையாற்ற முடியாது, ஆனால் இவ்வளவு பெரிய கூட்டம் வைத்திருந்தால் சேவையாற்றவே முடியாதே?
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: