புது தில்லி : சாத்தானின் கவிதைகள் எனும் சர்ச்சைக்குரிய நாவலை எழுதியிருக்காவிட்டால் சல்மான் ருஷ்டியின் பெயரே யாருக்கும் தெரிந்திருக்காது எனும் சொல்லும் அளவுக்கு தகுதி குறைந்த எழுத்தாளர் தான் சல்மான் ருஷ்டி என்று முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதியும் பிரஸ் கவுன்சிலின் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
வெளிநாட்டில் வாழும் எழுத்தாளர்கள் என்றால் சிறந்தவர்களாக தான் இருப்பார்கள் என்ற காலனித்துவ அடிமை புத்தியிலிருந்து நம் மக்கள் விடுபடவில்லை என்று கூறிய கட்ஜு சல்மான் ருஷ்டி வர கூடாது என்று தடுத்தது சரியா, தவறா என்று சொல்ல விரும்பவில்லை என்றும் அதை விட முக்கிய பிரச்னை குறித்தே தாம் கருத்து கூறுவதாக தெரிவி்த்தார்.
சல்மான் ருஷ்டியின் நள்ளிரவு குழந்தைகள் உள்ளிட்ட சில நூற்களை தாம் படித்துள்ளதாகவும் அவை ருஷ்டியின் எழுத்துகள் தரமற்றவை என்பதை புலப்படுத்துவதாக கூறிய கட்ஜு பனாரஸின் நதிக்கரையில் வாழ்ந்ததால் கபீர் மற்றும் துளசிதாசை விட தேம்ஸ் நதிக்கரையில் வாழும் ருஷ்டி தரமான எழுத்தாளராக கருதப்படுகிறார் என்று கட்ஜு கூறினார்.
குறுகிய ஜாதி பிரிவினைக்கு எதிராக கபீரும், பெண்கள் கொடுமைக்கு எதிராக சரத் சந்திராவும் தேசிய ஒற்றுமைக்கு ஆதரவாக பாரதியாரும் போராடியதை போன்றும் சர்வதேச அளவில் சார்லஸ் டிக்கன்ஸும் கார்கியும் சுரண்டலுக்கு எதிராக போராடியதை போன்று நவீன இந்தியா சந்திக்கும் பிரச்னைகளுக்கு எதிராக இலக்கியம் பயன்பட வேண்டாம். இவற்றையெல்லாம் விவாதிக்காமல் சல்மான் ருஷ்டி எனும் தனி மனிதரை குறித்து விவாதித்தது ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் தரம் குறைந்துள்ளதை காட்டுகிறது என்றும் மார்க்கண்டேய கட்ஜு கூறினார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
சல்மான் ருஷ்டியின் படைப்புகள் தரமற்றவை : மார்க்கண்டேய கட்ஜு காட்டம்
Comments
Aanal namathu ezhuththalarkaL karuththu sudhanthiram ennum peyaril poorkkodi thookkuvadhu vazhakkam.
Sudhnthiramum varaiyarukkappaddadhu thaan.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்......அவனின் சாத்தானின் கவிதைகள்
என்ற கன்றாவி எழுத்தே ...போதும்.....
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed