இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா நீதிமன்றத்தில் சசிகலா கதறி அழுகை!

நீதிமன்றத்தில் சசிகலா கதறி அழுகை!

நீதிமன்றத்தில் சசிகலா கதறி அழுகை!பெங்களூர் அக்ரஹார சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சசிகலா கதறி அழுதார். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவருடைய முன்னாள் தோழி சசிகலா உள்ளிட்டவர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் அக்ரஹார சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் இன்று சசிகலா நேரில் ஆஜராகி கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

முன்னதாக, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் ஆஜரானபோது, "வரவு செலவு குறித்து தமக்கு எதுவும் தெரியாது" என்றும், "சசிகலாதான் எல்லா கணக்கு வழக்குகளையும் பார்த்ததார்" என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக தெரிகிறது.

இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜரான சசிகலாவிடம் ஜெயலலிதா கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது "வங்கி கணக்கு வழக்கு விவரங்கள் குறித்து ஜெயலலிதாவுக்கு எதுவும் தெரியாது" என்றும், "காசோலைகளில் கையெழுத்து மட்டுமே அவர் போடுவார்; நான் தான் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வேன்" என்று சசிகலா, ஜெயலலிதாவுக்குச் சாதகமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டபோது பதிலளிக்க முடியாமல் சசிகலா நீதிமன்றத்திலேயே கதறி அழுததாக கூறப்படுகிறது. அவர் அழுகையை நிறுத்த போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டு, அவர் நிதானத்துக்கு வந்த பின்னர் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அதன்பின்னர் சாந்தமாக சசிகலா பதிலளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments  

 
-6 # azifair 2012-02-18 15:58
************ உங்க நடிப்புக்கு ஒரு அளவே இல்லையா...********************** ரெண்டு பெரும் நடிக்கிற நடிப்புல தமிழ்நாடே தோத்துடுச்சி. *****************(அநாகரீகமான கருத்து எடிட் செய்யப்பட்டுள்ளது - மாடரேட்டர், இந்நேரம்.காம்)
பதில் | Reply with quote | Quote
 
 
0 # நம்பிக்கையாளன் 2012-02-18 20:29
அநாகரீகமான கருத்து மாடரேட்டர் அவர்கள் இவற்றை நீக்கவேண்டும். நாகரீகமான எழுத கற்றுக்கொள்ளுங்கள் சகோதரரே
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # parthiban 2012-02-18 21:37
சோ சிறந்த இயக்குனர்தான்...
பதில் | Reply with quote | Quote
 
 
0 # devaraj.v 2012-02-19 02:40
வீட்டு எலிஉம் நாட்டு எலிஉம் சாப்பிட்டது இப்பொ நல்லா நடீக்குது
பதில் | Reply with quote | Quote
 
 
0 # unmai 2012-02-20 14:25
சஷி. ஜெ யின் நாடகம்
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: