கோவாவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஆற்றில் மூழ்கியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 15 குழந்தைகளில் இரண்டு குழந்தைகளில் சடலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
கோவாவில் உள்ள அல்டோனா கிராமத்தில் உள்ள கல்வி என்ற நதியில் பேருந்து விழுந்தது. ஓட்டுனரின் கட்டுப்பாடில்லாத காரணத்தினால் பேருந்து கவிழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நதியில் விழுந்தவுடன் ஓட்டுனரும் நடத்துனரும் குதித்து தப்பி விட்டனர். நதியில் மூழ்கிய குழந்தைகளை காப்பாற்றும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேரின் சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
பள்ளிப் பேருந்து நதியில் மூழ்கியது