கடந்த 2009 ஆண்டு மே மாதம் நடந்த விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும், இலங்கை ராணுவத்திற்கும் நடந்த இறுதிப் போரில் சுமார் 11,000க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பினர் இதுவரை 550 விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை பட்டிகலோயா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த மேலும் 73 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
திருந்திய விடுதலைப் புலிகளுக்கு சுய தொழில் செய்ய நிதி வழங்குவதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தொழிற்பயிற்சியும் வழங்குவதாக அந்நாட்டு மறுவாழ்வு துறை அமைச்சக செயலர் திஸநாயகே செய்தியாளார்களிடம் தெரிவித்தார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
இலங்கை சிறையிலிருந்து 73 விடுதலைப்புலிகள் விடுதலை!