இந்தியாவின் தென்பகுதியில் அமைக்கபட்டுள்ள அணுமின் நிலையங்கள் பற்றி சர்வதேச அணுசக்தி ஆணையத்திடம் முறையீடு செய்யப்போவதாக இலங்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தென்பகுதியில் அமைக்கபட்டுள்ள அணுமின் நிலையங்கள் பற்றி சர்வதேச அணுசக்தி ஆணையத்திடம் முறையீடு செய்யப்போவதாக இலங்கை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை குழு கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற மனித உரிமை மீறல் தீர்மானம் இந்தியா ஆதரவுடன் நிறைவேறியது. இதனால் கடுப்படைந்துள்ள சிங்கள வெறியர்கள், அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிராக தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கொழும்பு - அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்திருந்தால் மன்மோகன் சிங் பிரதமராக நீடித்திருக்க முடியாது என இலங்கை அமைச்சர் டி.யு.குணசேகரா கருத்துத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு: உலகில் எந்த பகுதியில் இருந்து நெருக்கடிகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள இலங்கை அரசு தயாராக உள்ளதாக அந்த நாட்டின் அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.
நமது வெற்றியை சிறுமைப் படுத்த முயற்சிகள் நடக்கின்றன, அதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என, இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.
கொழும்பு: ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை குழுமத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட அமெரிக்கா முன்முயற்சி எடுத்தது. இலங்கைக்கு எதிராகவும், தீர்மானத்திற்கு ஆதரவாகவும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் சட்டம் ஒழுங்கு நிலைகுலைந்து வருவதாகவும், சட்டவிரோதக் கும்பல்களும் ஆயுதக் குழுக்களும் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இயங்கி வருவது இப்போது மிகவும் சாதாரணமாகிவிட்டது என்று ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
ஜெனிவா : ஐ.நா சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கையில் நடைபெற்ற போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த தீர்மானம் வெற்றி பெற்றது அறிந்ததே. இச்சூழலில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தவர்களை இலங்கை மிரட்டியதாக ஐ.நா சபையின் மனித உரிமை தலைவர் நவி பிள்ளை புகார் கூறியுள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இந்தியா ஆதரவுடன் நிறைவேறிய தகவல் பரவியதும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப்போரில் அப்பாவி தமிழர்களைக் கொத்து கொத்தாகக் கொன்றொழித்ததோடு, சரணடைந்த விடுதலைப் புலிகளை சித்திரவதை செய்ததை சேனல் 4 செய்தி தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது.விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை கொடூரமாக சுட்டுக்கொன்றது குறித்த காணொளியையும் சமீபத்தில் வெளியிட்டது.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும் என்று கோரும், அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட ஐ.நா மன்ற மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கையிலிருந்து இயங்கும் “குடிமக்கள் உரிமைகள் இயக்கம்” என்ற அமைப்பு குரல் கொடுத்திருக்கிறது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப் பட்ட காணொளி ஆதாரத்தை வரும் புதன் அன்று சேனல் 4 தொலைக் காட்சியில் ஒளிபரப்ப உள்ளதாக "இலங்கையின் கொலைக் கலங்கள் - தண்டிக்கப் படாத போர்க் குற்றங்கள்" என்ற ஆவணப் படத்தை எடுத்து வரும் கெல்லம் மேக்ரே தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை (07.03.2012) முதல் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊழியர்கள் இலங்கையின் வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களிடம் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டுக்கு எதிராகக் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை (08.03.2012) இத்தாலியத் தலைநகர் ரோமில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவை ஆதரித்து ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கை ஒன்றியத்தின்கீழ் இலங்கையர்கள் அணிதிரண்டனர்.
தேனிலவைக் கழிப்பதற்காகத் தன் மனைவியை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு அழைத்துவந்த கணவன், அவரது கழுத்தைவெட்டிக் கொடூரமாகக் கொலைசெய்துவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
ஆளும்கட்சியில் இருக்கும் சில அரசியல்வாதிகள் நாட்டில் உள்ள பிரபல வியாபாரிகளை அச்சுறுத்தி அவர்களிடம் கப்பம் வசூலித்துப் பெரும் பணம் சேர்த்து வருகின்றனர் என்றும், கப்பம் தர மறுப்போரைத் தொடர்ந்து பலவகையிலும் தொந்தரவுபடுத்தி வருகின்றனர் என்றும் இலங்கை சுதந்திரக் கட்சி செயலாளர் நாயகம் மைத்ரிபால சிரிசேன குற்றஞ்சாட்டியுள்ளார்.
தலையில் கொம்புடன் ஆதிகாலத்தில் பூமியில் சிலர் வாழ்ந்தார்கள் என்று புராண கதைகளில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவை பதவியிலிருந்து அகற்றுவதற்கு வெளிநாட்டு சக்திகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக தெரிவித்துள்ளார். கடவத்தை பிரதேசத்தில் அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைத்தபோது ராஜபக்சே இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் தமிழர்களை இனப் படுகொலை செய்த கொடூரன் ராஜபக்சேவுக்கு பாரதரத்னா வழங்கவேண்டும் என்று பரபரப்பு அரசியல்வாதியான ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கோரியுள்ளார்.
விடுதலைப் புலிகள் செய்த அட்டூழியங்களை விவரிப்பதாக கூறும் ஒரு விவரணப் படத்தை இலங்கை அரசு நேற்று (08.02.2012) வெளியிட்டுள்ளது.
இலங்கையில் உள்ள மட்டக்களப்பில் சிங்களவர்களின் நிலங்களை தமிழர்கள் அபகரிப்பதாக ஒரு வித்தியாசமான குற்றச்சாட்டை புத்தத் துறவி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Page 2 of 4