இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டு பெண் ஒருவரை மிஹிந்தலை ரஜமஹா விஹாரையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாக வழிகாட்டிகள் இருவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை குறித்த பெண் மிஹிந்தலை விஹாரைக்கு சென்றிருந்தபோது இந்தச் சம்பவத்தை எதிர்நோக்கியதாக பொலிசார் தெரிவித்தனர். வழிகாட்டிகள் இருவர் குறித்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு போதைப் பொருளை வழங்க முயற்சித்ததாகவும் அதற்கு அப்பெண் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து தன்னை குறித்த இரு வழிகாட்டிகளும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாக அவர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
வெளிநாட்டுப் பெண் பாலியல் துஷ்பிரயோகம்!