இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இலங்கை நாட்டை விட்டு வெளியேறுங்கள் - இஸ்லாமிய அமைப்பினருக்கு இலங்கை உத்தரவு

நாட்டை விட்டு வெளியேறுங்கள் - இஸ்லாமிய அமைப்பினருக்கு இலங்கை உத்தரவு

இலங்கையில் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மதக்குழுவினரை இரண்டு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

முஸ்லிம் மக்கள் மத்தியில் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுமாறு பிரச்சாரம் செய்து வரும் தப்லீக் ஜமாத் என்ற குழுவினர் கொழும்பில் தங்கி மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் கொழும்பிலுள்ள கிராண்ட்பாஸிலுள்ள தப்லீக் ஜமாத்தின் தலைமையகத்தில் தங்கியிருந்தனர்.

வியாழக்கிழமை தலைமையகம் வந்த காவல்துறையினர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு உள்ளிட்ட 161 நாடுகளிலிருந்து வந்துள்ள தப்லீக் ஜமாத்தைச் சார்ந்தவர்கள் அனைவரையும் வெளியேறுமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர்.

”சுற்றிப்பார்ப்பதற்கான விசாவில் வந்து வேறு எந்த வேலைகளிலும் ஈடுபடக்கூடாது என ஆணை இருப்பதால் இவர்கள் வெளியேறுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக” குடிவரவு அதிகாரி சூலானந்த பெரேரா தெரிவித்தார். தப்லீக் ஜமாத்தினரைச் சார்ந்த நிர்வாகிகள் இதனை அமைச்சர் பௌஸியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ”இந்தப் பிரச்னையை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சேயிடன் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக” இலங்கை ஜமாஅத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

மேற்கு மாகாண ஆளுநர் அலவி மௌலானா தெரிவிக்கையில், ”தப்லீக் ஜமாத் என்பது முஸ்லிம்களிடையே மட்டும் இஸ்லாமிய ஒழுக்கங்களை கடைப்பிடிக்க வலியுறுத்தும் ஒரு அமைப்பு. அதற்கு எதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை” என்று கூறினார்.

Comments  

 
+3 # idrees 2012-01-22 16:45
தலைப்பு தப்பா இருக்கின்றதே....
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # தோடகன் 2012-01-22 17:48
”தப்லீக் ஜமாத் என்பது முஸ்லிம்களிடையே மட்டும் இஸ்லாமிய ஒழுக்கங்களை கடைப்பிடிக்க வலியுறுத்தும் ஒரு அமைப்பு.

இஸ்லாமியப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மதக்குழுவினரை

இஸ்லாமிய அமைப்பினருக்கு இலங்கை உத்தரவு
பதில் | Reply with quote | Quote
 
 
0 # abdul 2012-01-22 19:31
thableeg jamath endra thalaipai vaikkavendum thevai illatha kulappangal uruvaagum thableeg jamaath endral makkal atharavu uruvagum ithanal ilangai arasukku tharmasangadam uruvaagum enave ilangai arasukku nerukkadi koduthu thableeg jamaath male ulla thavarana karutthai neeki avaigalai islaa pani seiya anumathi kodukkum kattayathirku ilangai arsu murpadum enave thalaippu migaum mukkiyam
பதில் | Reply with quote | Quote
 
 
0 # நம்பிக்கையாளன் 2012-01-22 20:56
இஸ்லாம் நன்மையை ஏவி தீமையை தடுங்கள் என்று முஸ்லிம்களுக்கு சொல்கிறது. ஆனால் தப்லீக் நன்மையை ஏவினால் தீமை தானாக போய்விடும் என்கிறது. அப்படி என்றால் இஸ்லாம் சொல்வது தவறா? இஸ்லாம் மனிதகுலத்தின் முழுமையான வாழ்க்கைத்திட்டம் இல்லையா? தப்லீக் ஜமாத் இரண்டையும் செய்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று நான் நினைக்கிறேன்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Dhahlan 2012-05-05 21:32
satthiyam wnadhal asaththiyam alinthe teerum enru quraan kuruwathu poiya
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Niyas 2012-01-24 16:54
Riyaaz....Mind your words...*************************** ********************** ************************...
avanga paattukku markkaththa podana pannittu avanga sonda moneya thaane spend panranga..ungala maadiri aduththavan kaasula soodu kairavanga illa...

திரு Niyas அவர்களே, தங்களது அநாகரீக கருத்து நீக்கப்படுகின்றது - மாடரேட்டர், இந்நேரம்.காம்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # ssrinivasan 2012-02-15 01:53
மதவாதம் மோசமானது. தடை நல்லது.
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: