கடந்த (17/3/2011) பிரதேச சபைத் தேர்தலில் சுயேச்சைக்குழு – 01 இல் போட்டியிட்ட இலங்கை, அட்டாளைச் சேனையைச் சேர்ந்த அதன் தலைமை வேட்பாளரான இஸ்மாங்கண்டு மொஹம்மட் றியாஸ் என்பவருக்கு அரசியலில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக ஆயுதக் குழுக்களால் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. இதனையடுத்து அவர் தலைமறைவானார்.
அந்த ஆயுதக் குழுக்கள் முன்னாள் வேட்பாளரான இஸ்மாங்கண்டு மொஹம்மட் றியாஸ் என்பவரைக் கொலை செய்யும் முயற்சியில் மீண்டும் தேடிவருவதாகவும் அவரது ஆதரவாளர்களில் ஒருவர் 8/12/2011 அட்டாளைச் சேனையில் வைத்து மிரட்டியும் தாக்கியும் முன்னாள் வேட்பாளர் பற்றிய தகவலைத் தரும்படியும் கூறிவிட்டு சென்றுள்ளனர்.
- றிஃபாஸ்
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
முன்னாள் வேட்பாளருக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல்!