அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாமக ஆட்சி பிடிக்கும் என பாமக நிறுவனர் ராமதாசு நம்பிக்கை தெரிவித்தார். திருவண்ணாமலையில் கட்சி கூட்டத்தில் பேசிய அவர், பாமவிற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு தற்காலிகமே என்றும், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள், மக்களை பிச்சைகாரர்களாகிவிட்டதாக கூறினார். சட்டமன்றத்தில் ஜெ-விஜயகாந்த் மோதல் குறித்து பேசிய அவர். படத்தில் நடிப்பது போலெல்லாம் நிஜத்திலும் நடிப்பது என்பது எதிர்கட்சி தலைவருக்கு அழகல்ல என்ற அவர், முதல்வரின் கருத்தான தகுதியற்றவர் எதிர்கட்சி தலைவராகியிருக்கிறார் என்பதில் தான் உடன்படுவதாக கூறினார்.
எனினும், சட்டமன்றத்தில் அனைவருக்கும் பேச்சுரிமை கொடுக்கபட வேண்டுமென வலியுறுத்திய அது தான் உண்மையான ஜனநாயகம் என கூறினார். தனது கட்சி போல் தமிழகத்தில் வேறு எந்த கட்சியும் தெளிவான மக்கள் நல திட்டங்களை வெளியிட்டத்தில்லை என்றும் இது வரை சுமார் 22 மாதிரி நலத்திட்டங்களை பாமக வெளியிட்டுள்ளதாக கூறினார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
2016-ல் பாமக ஆட்சி - ராமதாசின் காமெடி ஆரம்பம்
Comments
தமிழகத்தில் திராவிடர்கட்சிகளின் ஆதிக்கத்தால் பெயரளவில்லாவது மதவாதம் இல்லாமல் இருக்கிறது.
மாற்றார்கலுக்கு வாய்ளித்து இந்த மாநிலத்தையும் சுடுகாடாக்காதீர்கள்.
தலைப்பின் ஒருபகுதி செய்தியாகவும், இன்னொரு பகுதி அதுபற்றிய உங்கள் கருத்தாகவும் உள்ளது.
நாம என்னா சொல்றம்னா, செய்திய செய்தியா குடுங்க. செய்தி விமர்சனத்த, அது எப்படி காமெடியாவோ ட்ராஜடியாவோ மாறுது என்று தனிப்பகுதில் (கட்டுரை, விமர்சனம் பகுதியில்) சொல்லுங்க.
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed