இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் நாங்கள் ஆலோசனை சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை: ராமதாஸ் ஆதங்கம்

நாங்கள் ஆலோசனை சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை: ராமதாஸ் ஆதங்கம்

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை கண்டித்து திருச்சி, சேலம், உளுந்தூர்பேட்டை, கடலூர், வேலூர், தஞ்சை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாமகவினர் இன்று மின்வெட்டைக் கண்டித்து தீப்பந்தம், லாந்தர் விளக்குகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், “மின்வெட்டால் தமிழகத்தின்  ஒட்டுமொத்த பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் மின்வெட்டை சரிசெய்வோம் என்று அதிமுக கூறியது. ஆனால் 8 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மின்வெட்டு நேரம் 8 மணி நேரத்திலிருந்து, 10 மணி நேரமாக அதிகரித்துள்ளது.

மின்வெட்டை சரி செய்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சியிடம் பல்வேறு ஆலோசனைகள் உள்ளன.  ஆனால் நாங்கள் கூறினால் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை

மின்வெட்டை சரிசெய்யாமல் இத்தனை நாட்களாக தன்னுடன் இருந்தவர்களை கைது செய்து மக்களை திசைதிருப்புகின்றனர் என்றார்.

Comments  

 
0 # அன்பழகன், தோஹா 2012-02-21 00:05
அய்யோ..பாவம்
பதில் | Reply with quote | Quote
 
 
0 # நான்தான்... 2012-02-21 10:06
ஆமா, என்கிட்ட நல்ல பல ஐடியாக்கள் இருக்கு, எல்லாரும் இங்க வாங்க, ஒரு ஐடியா என்னன்னா... இந்த வரைபடத்த பாருங்க, நம்ம தமிழ்நாட்ட, எப்படி அனுமான் சஞ்சீவ் மலைய தூக்கினாறோன்னு சொல்றமோ அதேமாதிரி அப்படியே அலேக்கா தூக்கி மேல டில்லி பக்கத்துல கொன்டுபோய் வச்சிரனும் இல்லன்னா சூரியன் மறையாத நாடு பக்கதுல கொன்டு போய் வச்சிரனும்... இத சொன்னா, நம்மல லூசு தாஸ், டவுசரு தாஸ்....ங்றானுங்க....ம்ம் என்னத்த சொல்ல....
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: