இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் இலக்கிய அறிவுரையை நடிகர்கள் சொல்லும் நிலைமையா? - ரஜினி மீது சாரு காட்டம்!

இலக்கிய அறிவுரையை நடிகர்கள் சொல்லும் நிலைமையா? - ரஜினி மீது சாரு காட்டம்!

தமிழ் இலக்கிய அறிவுரையை ரஜினி போன்ற நடிகர்கள் சொல்லும் நிலைமையா? - சாரு காட்டம்கனடா நாட்டின் இயல் விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கான பாராட்டு விழா சென்னையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் மற்றும் பல எழுத்தாளர்கள், திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

அந்நிகழ்ச்சியில் 'படைப்பாளி', படைப்பு என்றெல்லாம் ஒரு  சிறப்பான உரையையும் ரஜினி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ரஜினியை கடுமையாக சாடியுள்ளார் அல்டிமேட் ரைட்டர் எனப்படும் சாரு நிவேதிதா. தான் எழுதிய ஒரு புத்தகத்தின் விமர்சனக் கூட்டத்தை சென்னையில் நடத்திய நிவேதிதா, அவ்விழாவில் பேசுகையில்,

"ஒரு எழுத்தாளன் அதிக வாசகர்களைக் கொண்டு கூட்டம் நடத்தி விட்டார். அவரை மிஞ்சி நிற்க வேண்டும் என்ற நோக்கில், நூல் வெளியீட்டுக் கூட்டங்களையும், விமர்சனக் கூட்டங்களையும் நடத்தும் போக்கு, தமிழ் இலக்கியவாதிகள் மத்தியில் நிலவுகிறது. அதற்காக, சினிமா நடிகர்களைக் கொண்டு பாராட்டுக் கூட்டங்களை நடத்திக் கொள்கின்றனர்.

தமிழ் இலக்கியங்களைப் படியுங்கள் என, சினிமா நடிகர் சொல்லும் அளவுக்கு, நிலைமையை மோசமாக்கி வருகின்றனர். இது என்னவிதமான ஆரோக்கியமான போக்கை, தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்தப் போகிறது?.

காமத்தை மையமாகக் கொண்டு நாவல்களை எழுதுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. இன்றைய இளைஞர்கள், காமத்தால் சீரழியும் போது அதை எழுதாமல் இருக்க முடியாது."

என்று சாரு நிவேதிதா பேசினார்.

தன்னுடன் இணைய அரட்டை செய்த வாசகி ஒருவருடன் ஆபாசமாகப் பேசியதாக அகப்பட்டு, ஆதாரங்களுடன் அசிங்கப்படுத்தப்பட்ட சாரு நிவேதிதா, ரஜினிகாந்தை மறைமுகமாகத் தாக்கியுள்ளது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments  

 
+2 # அருள் 2012-02-05 14:56
குடிகார, பொம்பளை பொறுக்கிகள் மட்டும்தான் இலக்கிய அறிவுரைகள் சொல்ல வேண்டும் என தமிழ்நாட்டில் சட்டம் உள்ளதா என்ன?

இலக்கியம் என்ற பெயரில் பெண்ணுடலை பீஸ் பீஸாக்கி, மனிதனின் ஆபாச எண்ணங்களுக்கு உரமிட்டு இளைய தலைமுறையினைச் சீரழிக்கும் சாருவுக்கு முதலில் என்ன தகுதியிருக்கிறது என்பதைப் பேசுவோமா?
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # luz 2012-02-05 16:08
சரியா சொன்னேன்க அருல்
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # சந்தானம் 2012-02-05 16:19
சாரு நிவேதிதா போன்ற சில தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் சமூகத்தின் எழுச்சிக்கு காரணமாக அமைவதில்லை என்பது வருந்தத்தக்க விசயம். யார் பெரியவன் என்ற சண்டையிலும்,அசிங்கமாக எழுதுவது நாகரீகம் என்ற மாயையிலும் உழன்று கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எழுதுவதை விட எழுதாமல் இருப்பதுதான் தமிழுக்கு செய்யும் தொண்டாக அமையும்.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # vel 2012-02-05 18:24
யாரை பட்ரியும் எவரும் விமர்சனம் செய்யலாம் இதில் நடிகர் என்ன எழுத்தாளர்கள் தகுதி.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # murugan 2012-02-06 12:35
நல்லா சொன்னிங்க அருள்,,,,,, இலக்கியம் படினு,,,,,,, சொல்ல,,,, அனைவருககும் தகுதி உண்டு ....
.
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: