இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் மகள்களைச் சீரழித்த தந்தை: மகள் தற்கொலை!

மகள்களைச் சீரழித்த தந்தை: மகள் தற்கொலை!

மகள்களைச் சீரழித்த தந்தை: மகள் தற்கொலை!திருமணம் முடித்துச் சென்ற பின்னரும் தனக்குப் பாலியல் தொல்லை தந்து வந்த பெற்ற தந்தையின் கொடுமையினைப் பொறுக்க முடியாமல் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆக்கனூரைச் சேர்ந்தவர் பிச்சைபிள்ளை. 42 வயதாகும் இவருக்கு மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜான்சிராணிக்குக் கடந்த ஆண்டு திருமணம் முடிந்தது.

இந்நிலையில் திடீரென ஜான்சிராணி விஷயமருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருச்சி அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிட்சையில் பலனின்றி கடந்த 7 ஆம் தேதி ஜான்சிராணி மரணமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து தன் மருமகனின் வரதட்சணை கொடுமை தாங்கமுடியாமல்தான் தன் மகள் தற்கொலை செய்து கொண்டதாக பிச்சை பிள்ளை கொடுத்த புகாரின் அடிப்படையில் மங்களமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

ஜான்சிராணியின் மரணம் தொடர்பாக நடந்த தொடர் விசாரணைகளில் அவரின் தந்தை பிச்சை பிள்ளை மற்றும் தாய் அமுதா மீது காவல்துறையினருக்குச் சந்தேகம் எழுந்தது. தொடர் விசாரணையில் அதிர்ச்சியளிக்கும்படியான தகவல்கள் காவல்துறைக்குக் கிடைத்துள்ளது.

ஜான்சிராணி வயதுக்கு வந்த நாள் முதலாக அவரின் தந்தை பிச்சை பிள்ளை தன் மகளென்றும் பாராமல் ஜான்சிராணியினைப் பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தியுள்ளார். இதனை அறிந்திருந்த தாய் அமுதாவும் அதற்கு எதிராக எதுவும் செய்யவில்லை. இந்நிலையில், திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்ட ஜான்சி ராணி தாய் வீட்டிற்கு வரும்போதெல்லாம் பிச்சை பிள்ளை ஜான்சிராணியை வல்லுறவு செய்து வந்துள்ளார். இதனால் ஜான்சிராணி தாய் வீட்டிற்கு வருவதையே நிறுத்தியுள்ளார்.

இந்நிலையிலேயே ஜான்சிராணி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தந்தை தன்னை வல்லுறவுகொண்டது கணவனுக்குத் தெரிய வந்ததால் ஜான்சி ராணி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் பிச்சை பிள்ளை மற்றும் அமுதாவிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், பிச்சை பிள்ளை தன்னுடைய தனது மற்றொரு மகளையும் பாலியல் வல்லுறவு செய்து வருவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பிச்சைபிள்ளையைக் காவல்துறையினர் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். பெற்ற மகள்களைத் தந்தையே சீரழித்த சம்பவம் பெரம்பலூர் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Comments  

 
+6 # arun 2012-02-02 10:07
intha madiri alungala nadu roatla nikka vachu antha edathula suttu kollanum.
பதில் | Reply with quote | Quote
 
 
-3 # abdulkhadar 2012-02-02 14:13
பாவப்பட்டபெற்றோர்
பதில் | Reply with quote | Quote
 
 
-2 # usman 2012-02-02 15:09
இது உன்மை மாதிரி தெரியல
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # shajahan 2012-02-02 17:40
இந்த நாய்க்கெல்லாம் சவூதி சட்டம் தான் சரி. இந்த செய்தி எல்லாம் உண்மை எனில் அந்த மனித உருவில் இருக்கும் நாயை ஊர்ப்பொதுவில் வைத்து "அதை" நறுக்க வேண்டும்..
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # aj,ameen 2012-02-04 10:44
petra magal enru koda paarkkamal miruga seyal,naam ayal naaddu kalaacharathila irukirum? Matra pilligalukku paathippu illamal thakka thandanai kodukka venndum.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # ரமீஜா 2012-02-05 13:22
இந்த சம்பவம் உண்மையாக கூட இருக்கலாம்,இதுப்போன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் கேரளாவில் நடந்துள்ளது
பதில் | Reply with quote | Quote
 
 
0 # gkmoorthy 2012-03-02 10:20
PENNUM DEYVAMUM ONRU THAN ITHARKU MANNIPPE KIDAYATHU ITHARKU ORU PADAM KARPIKKA VENDUM
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: