தமிழக சட்டசபையில் அதிமுக தேமுதிக கட்சிகளிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது அறிந்ததே.
முதல்வர் ஜெயலலிதாவும், எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்தும் ஆவேசமாக ஒருவருக்கொருவர் சவா(டா)ல் விட்டுக்கொண்டனர்.
இதுபற்றி திமுக தலைவர் கருணாநிதியிடம் கேட்கப்பட்டதற்கு, "அதிமுக ஆளுங்கட்சியாகிவிட்டால் எதிர்கட்சிகள் மீது எப்படியெல்லாம் எதேச்சதிகாரப் போக்கைக் கையாளும் என்று தெரிந்தது தான். அவர்களுக்கே உரித்தான அந்த தனிபாணியை இப்போதும் கையாண்டு வருகின்றனர்" என்றார் கருணாநிதி.
முன்பு தேமுதிகவுடன் கூட்டணி வைத்தது குறித்து ஜெயலலிதா | அதிமுகவினர் விரும்பியதால்தான் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க நேர்ந்தது என்றும், தேமுதிகவினர் கூட்டணிக்கு அருகதையற்றவர்கள் என்றும் கூறியிருப்பதை கருணாநிதி வன்மையாகக் கண்டித்தார்.
மேலும், "கடந்த சட்டசபை தேர்தலில் இடதுசாரிகட்சிகள் தேமுதிக ஆகியவை அதிமுகவுடன் இணைந்திருந்தன. அப்போது நாங்கள் தோற்கவில்லை. மூன்றாவது இடம் பிடித்தோம்" என்றார் கருணாநிதி.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
தேமுதிக கூட்டணிக்கு அதிமுக கூறும் காரணத்தைக் கண்டிக்கிறேன் - கருணாநிதி
Comments
It is all in future mothers' hand.
They should grow the child with the brave.
Fear leads to death.
Brave leads to Happy life.
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed