இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் என்னுடைய இரு மனைவிகளும் ஓய்வு எடுக்கச் சொல்கின்றனர் - கருணாநிதி!

என்னுடைய இரு மனைவிகளும் ஓய்வு எடுக்கச் சொல்கின்றனர் - கருணாநிதி!

என்னுடைய மனைவிகள் இருவரும் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். என்னால் தான் ஓய்வு பெற முடிய வில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

திமுகவின் பொதுக் குழு முடிந்ததும் திமுக தலைவர் கருணாநிதியை செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். செய்தியாளர்களின் பேட்டியின் போது ''

கேள்வி : அண்மையில் ஒரு பத்திரிகையில் ஸ்டாலின் அடுத்த தி.மு.க. தலைவராக வரவேண்டுமென்று 58 சதவிகிதம் பேர் வாக்களித்திருக்கிறார்கள். அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

கருணாநிதி : என்னுடைய மகனுக்கு அப்படிப்பட்ட ஒரு பெருமை வந்தால் நான் அதை மறுப்பேனா?

கேள்வி : அதே சர்வேயில் குறிப்பிட்ட சத விகிதம் பேர் நீங்கள் தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டுமென்று சொல்லி யிருக்கிறார்களே?

கருணாநிதி : அந்தப்பத்திரிகையிலே மாத்திர மல்ல - என்னுடைய மனைவிகள் இருவரும் அதைத் தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். என்னால் தான் ஓய்வு பெற முடிய வில்லை '' என்று தெரிவித்தார்.

 

Comments  

 
0 # ram 2012-02-05 21:21
உங்கலுக்குதன் மக்கல் ஒயவு குடுத்துவிட்டாரகலே
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Raja 2012-02-06 12:01
என்ன கொடுமை சரவனன் சார் இது
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: