சென்னை மெரீனா கடற்கரையில் மதுகுடித்துக்கொண்டிருந்தவர்களை "இங்கே மது அருந்தக் கூடாது" என்று அண்ணா சதுக்கம் காவல்நிலைய சிறப்பு துணை ஆய்வாளர் கண்டித்தார். சீருடையில் இல்லாமல் இருந்த துணை ஆய்வாளரை அந்த நால்வரும் சராமரியாக அடித்து உதைத்தனர். பின்னர் காவல்துறை அலுவலர்கள் தலையிட்டு துணை ஆய்வாளரை மீட்டனர்.
அண்ணா சதுக்கம் காவல்நிலையத்தில் சிறப்புத் துணை ஆய்வாளாராகப் பணி செய்யும் முத்துராமலிங்கம் என்பவரே அவ்வாறு காவல் உலா பணி செய்து வந்த போது தாக்கப்பட்டுள்ளார். சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் இருந்த முத்துராமலிங்கத்தை யாரோ என்று நினைத்து அந்த குடிகாரர்க்ள் தாக்கியுள்ளனர். தாக்குதலில் முத்துராமலிங்கத்தின் தலை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறை, முத்துராமலிங்கத்தைக் குடிகாரர்களிடமிருந்து மீட்டெடுத்ததோடு, பாண்டியன், செல்வம், ரமேஷ், மார்ஷ் ஆகிய குடிகாரர்கள் நால்வரையும் கைதுசெய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தி.நகரின் உயர்தரவிடுதி ஒன்றின் பணியாளர்கள் என்று கூறப்படுகிறது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
காவல் துணை ஆய்வாளருக்கு அடி-உதை: நால்வர் கைது
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed