தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜே.எஸ். ரிபாயிக்குப் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பு கூறியுள்ளது.
நாகூரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இந்து முன்னணி தலைவரான இவரின் வீட்டுக்குக் கடந்த 1995 ஆம் ஆண்டு தபால் மூலம் பார்சல் குண்டு ஒன்று வந்தது. அதிலுள்ள குண்டுவெடித்து முத்துக்கிருஷ்ணனின் மனைவி தங்கம் பரிதாபமாக பலியானார். இந்த வழக்கில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தற்போதைய தலைவர் ரிபாயி, குத்புதீன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு பூந்தமல்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், தற்போது ஜாமீனில் உள்ள ரிபாயி, குத்புதீன் மற்றும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக தீர்ப்பானது. சிறையில் விசாரணை கைதிகளாக இருந்த இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
மமக தலைவர் ரிபாயிக்கு ஆயுள் தண்டனை!
Comments
பசீர்
குண்டு வெடிப்பு நடந்தபோது முத்துகிருஷ்ணன் அங்கு இல்லாததால் முஸ்லிம்களை சிக்க வைத்து கலவரத்தை ஏற்படுத்த அவரே ஏனிதை செய்திருக்கக்கூடாது?
நானும் இதனை சில முக்கிய வழக்குகளில் பார்த்து இருக்கிறேன். உதாரணத்திற்கு, கோவை போலீஸ் கான்ஸ்டபில் செல்வராஜ் கொலை வழக்கில் அல்-உம்மா செயலாளர் அன்சாரி உட்பட நான்கு பேருக்கு ஆயுள் தண்டனையும், ஷபி உட்பட மற்ற நான்கு பேருக்கு தூக்கு தனடனையும் வழங்கினார் நீதிபதி. ஆனால் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விடுதலையானது குறிப்பிடத்தக்கது.
அங்கேயும் நீதி கிடைக்குமா என்பது உறுதியான சந்தேகம் தான், காரணம் எத்துறையில்
எடுத்துகொண்டாலும் அங்கே இந்துத்துவா காவிகளின் கரை[ஆதிக்கம்] இருக்கத்தான் செய்கிறது
எனவே அப்பாவிகள் தண்டிக்கப்படாத அளவிற்கு இத்தருணத்தில் அணைத்து முஸ்லிம் அமைப்புகளும்,மற்றும் மாற்றுமத சகோதர அமைப்புகளும் ஒன்று கூடி களம் காண வேண்டும்,
ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒருநிரபராதிகூட தண்டிக்கப்பட கூடாது, என்ற சிந்தனை
சமுக போராளிகளின் உள்ளத்தில் எழவேண்டும். நாமும் இந்த சகோதர்களுக்காக நம்மை படைத்த
ஏக இறைவனிடம் கையேந்தி இறைசுவோம்,கருணை உள்ளம் கொண்ட கடவுள் கண்டிப்பாக அருள்புரிவான்
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed