தமிழக அமைச்சராக இருந்த செ.கருப்பசாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் இதனையொட்டி, சங்கரன்கோவில் தொகுதியில் அடுத்த மாதம் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அ.தி.மு.க.சார்பில் முத்துசெல்வி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு தேர்தல் களத்தில், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே களத்தில் இறங்கிய அ.தி.மு.க. முதல்கட்டமாக 26 அமைச்சர்களை தேர்தல் பணியில் நியமித்தது.
தற்போது மேலும் முஹம்மதுஜான், பி.பழனியப்பன், வி.மூர்த்தி, கே.ஏ.ஜெயபால், முக்கூர் என்.சுப்பிரமணியன், எம்எஸ்எம் ஆனந்தன் ஆகிய அமைச்சர்களையும் தேர்தல் பணிக்குழுவில் நியமித்துள்ளது.
இதன் மூலம் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. தேர்தல் பணிக்குழுவில் ஏற்கனவே 34 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்போது எம்.பிக்கள் செம்மலை, தம்பிதுரை உள்ளிட்டோர்களும் நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் தேர்தல் பொறுப்பாளர்கள் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேமுதிக தனது வேட்பாளரை அறிவித்ததால் நான்கு முனை போட்டி என்ற நிலையில் பரபரப்பு ஒவ்வொரு நாளும் கூடி வருகிறது.
ஒரு தொகுதியின் இடைத்தேர்தலுக்காக 32 அமைச்சர்கள் உள்ளிட்ட 43 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
தமிழக அமைச்சரவையே சங்கரன்கோவிலில் முகாம்
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed