இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் கூடங்குளம் உதயகுமாரை தே.பா.சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை

கூடங்குளம் உதயகுமாரை தே.பா.சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை

கூடங்குளத்தில் அணு மின்நிலையம் அமைப்பது தொடர்பாக போராட்டக்குழுவினர்களுக்கும், மத்திய அரசு தரப்பினர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் உதயகுமாரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழக  முதல்வர் ஜெயலலிதாவின் தனிப் பிரிவு அலுவலகத்தில், காங்கிரஸ் பிரமுகர் மனு கொடுத்துள்ளார்.

தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் சபீர் அலி, முதல்வர் தனிப் பிரிவில் அளித்த மனுவில் ,"கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக, சிலரது தூண்டுதலின் பேரில், உதயகுமார் தலைமையில் தினமும் போராட்டம் நடக்கிறது. .உதயகுமார் மீது, 164 வழக்குகள் இருந்தும், அவர் கைது செய்யப்படவில்லை. . அங்குள்ள மக்களை குழப்புவதோடு, நாட்டுக்கு எதிராகவும் பேசுகின்றனர். இதனால் மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது.

எனவே இந்திய இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் அவரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று அம்மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: