தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் சட்டப்பேரவையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட எதிர்கட்சி தலைவரும் நடிகருமான விஜயகாந்த், அரசு தனக்கு வழங்கியிருந்த காரைத் திரும்ப ஒப்படைத்தார்.
கடந்த 1 ஆம் தேதி நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில், தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்குவாதம் செய்தார். இதன்போது, சபை ஒழுங்கைமீறி கை நீட்டி பேசிய குற்றத்தின்பேரில் விஜயகாந்த் 10 நாட்கள் சட்டப்பேரவை நடவடிக்கைகளிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலோ எதிர்கட்சி தலைவர் என்ற முறையிலோ அரசு வழங்கும் சலுகைகள் எதையும் நடவடிக்கை காலத்தின்போது பயன்படுத்தகூடாது என்ற விதிமுறை உள்ளது. இதனால் அரசு தனக்கு வழங்கியிருந்த காரை விஜயகாந்த் திரும்ப தலைமை செயலகத்தில் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
அரசு காரைத் திரும்ப கொடுத்த விஜயகாந்த்!
Comments
றெஅட் மொரெ அபொஉட் அரசு காரைத் திரும்ப கொடுத்த விஜயகாந்த்! அட் ந்ந்ந்.இன்னெரம்.சொம்
றெஅட் மொரெ அபொஉட் அரசு காரைத் திரும்ப கொடுத்த விஜயகாந்த்! அட் ந்ந்ந்.இன்னெரம்.சொம்
Read more about அரசு காரைத் திரும்ப கொடுத்த விஜயகாந்த்! at www.inneram.comQuoting S.A.Alagarsamy:
Read more about அரசு காரைத் திரும்ப கொடுத்த விஜயகாந்த்! at www.inneram.com
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed