இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

You are here: உலகம் சிங்கப்பூர் - உயிரைப் பறித்த கோபம்

சிங்கப்பூர் - உயிரைப் பறித்த கோபம்

எஜமானி திட்டியதால் கோபமுற்ற பணிப்பெண் எஜமானியை கொன்ற அதிர்ச்சி சம்பவம் சிங்கப்பூரில் நடந்துள்ளது.

விட்ரியா என்ற இளம்பெண் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.இந்தோனேஷியாவைச் சார்ந்த இந்த பெண்ணின் வயது 19. இவர் கெக் என்ற 87 வயது

முதிய பெண்ணிடம் வேலை செய்து வந்தார். கெக் ஒரு விதவை ஆவார்.

விட்ரியா வேலையில் சேர்ந்து ஐந்து நாட்களே ஆன நிலையில் கெக் அவரை அடிக்கடி திட்டுவது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று (15.02.2012) கெக், விட்ரியாவை ”முட்டாள்” என திட்டியுள்ளார். இதனால் கோபமுற்ற விட்ரியா எஜமானியை அடித்துள்ளார். பின்னர் கெக்கின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

விட்ரியாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவருக்கு தீர்ப்பு வரும் மார்ச் 7 ஆம் திகதி வழங்கப்படும். கெக் பாசமுள்ளவராக இருந்தாலும் அடிக்கடி கோபப்படுவார் என கெக்கின் மகனும் மருமகளும் தெரிவித்துள்ளனர்.

Comments  

 
-1 # Bader 2012-02-17 01:56
உண்மை குற்றவாளியாக இருந்தால் இவரை தூக்கில வேண்டும். அன்புடன் சமுதாயம் நலன் கருதி உங்கள் நண்பர்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Gopala 2012-02-17 16:58
What ever is the punishment to best knowledge of the judge. But, the world shall learn the moral of the event, as love and affection is a winning ground. Both side some training / councelling may have avoided such a situation.
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # Gopala 2012-02-17 17:18
தட்டிக் குடுத்து வேலை வாங்குறயா... உசுரைக் கொடுத்து வேலை பாப்போம்யா... .... மவனே தட்டி வேலை வாங்கினே...? சமயம் பார்த்து காலை வாருறது மட்டுமா... முதுகுலே கூட குத்தி தூக்கிப் போடுவோம்லே... நாங்கள்லாம் யாரு..? சிங்கம்டா...... சிங்கம்.... இதுதான் மனிதன். அது உங்க கம்பெனி MD யா இருந்தாலும் , இல்லை உங்க வீட்டு கழிவறையை சுத்தம் பண்றதுக்கு வர்ற ஆளா இருந்தாலும்...எதுக்காக நாம ஆளுக்கு ஏத்தமாதிரி, நம்ம மனசு சொல்றமாதிரி மத்த ஜீவ ராசிகளை ஏத்த இறக்கமா பார்க்கிறோம்னு தெரியலை.... நம்ம மனசு சொல்றதையும் மீறி, எச்சரிக்கை பண்றதையும் மீறி எவ்வளவோ விஷயங்களை செய்றோம்... ஆனா, ஜாதி, மதம் , அற்ப ஜீவ ராசிகள்னு ஏன் ஒரு பாகு பாடு நமக்கு ....? நாம அவங்க நிலைமைல இருந்தா.. இதே மாதிரி ஒரு மதிப்பு நமக்கு கிடைச்சா.., நாம தாங்கிக் கொள்ளும் பக்குவத்தில இருக்கிறோமா? நிச்சயமா இல்ல. அப்போ, நாம ஓரளவுக்கு நல்ல நிலைலே இருக்கிறோம்... இது இயற்கையோ, கடவுளோ நமக்கு கொடுத்த பிச்சை. இந்த நிலை தொடர்ந்து நீடிக்க வேண்டாமா? எல்லோரையும் மதிக்க தொடங்குவோம்...இயற்கை நம்மளை படைச்சதே அதுக்குத்தான்...
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)