சீனாவின் லைடோனிங் மாகாணத்திலுள்ள உருக்கு தொழிற்சாலை உள்ளது. இதில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் பலியானதாகவும், 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த திடீர் விபத்து காரணமாக தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 3 தொழிலாளிகளைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வெடிவிபத்துக்கான காரணம் குறித்து ஆய்வுசெய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்ஷான் நகரில் திங்கட்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்தது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
சீன தொழிற்சாலை வெடிவிபத்தில் 10 பேர் பலி!