இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விமர்சனம் செய்தி விமர்சனம் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அடிப்படை சட்ட அறிவே இல்லாதவர் - வா.பாலா!

நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அடிப்படை சட்ட அறிவே இல்லாதவர் - வா.பாலா!

நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அடிப்படை சட்ட அறிவே இல்லாதவர்"சட்டங்களை இயற்றுவோரும், அவற்றை செயல்படுத்துவோரும், ஆணாதிக்க மனநிலையுடன் உள்ளதால், பெண்கள் தங்களுக்கான உரிமைகளைப் பெற, இன்னும் போராட வேண்டியுள்ளது" என சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் கூறியுள்ள செய்தி இந்நேர.காமில் வெளியானது.

இச்செய்தி குறித்து பிரபல சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா தெரிவித்துள்ள விமர்சன கட்டுரையிது!

**************

நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அடிப்படை சட்ட அறிவே இல்லாதவர்

சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
மின்னஞ்சல்: warrantbalaw@gmail.com

நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அடிப்படை சட்ட அறிவே இல்லாதவர் என்பதைச் சுட்டிக்காட்டிய பின்னரே அவரது இப்பேச்சு குறித்த விடயத்திற்குச் செல்வது சரியானதாக இருக்கும்.

சென்னை உயர்நீதிமன்ற இரு நபர் தலைமை அமர்வில் இவரும், தலைமை நீதிபதியாக இருந்த சுபாஷன் ரெட்டியும் 791/2001 என்கிற நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், குற்றம் சாற்றப்பட்டவருக்கு நீதிமன்ற அவமதிப்பு சட்டம் 1971 இன்படி, முறையான விசாரணை ஏதும் செய்யாமலேயே அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து அதிகபட்ச ஆறு மாத கால வெறுங்காவல் தண்டனையும், ரூபாய் இரண்டாயிரம் அபராதமும் விதித்தார்கள்.

விதிக்கப்பட்ட சிறை தண்டனையைக் கட்டாயம் அனுபவித்துதான் ஆக வேண்டும். இதற்கு பதிலாக தொகையை இழப்பீடாக செலுத்த முடியாது. ஆனால், விதிக்கப்பட்ட அபராதத்தைக் கட்ட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மாறாக, சிறை தண்டனையை அனுபவிக்க முடியும். ஆதலால், அப்படி சிறைத்தண்டனையுடன் விதிக்கப்பட்ட அபராதத்தைக் கட்டத்தவறினால் அதற்காக கூடுதலாக எவ்வளவு காலம் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்புரையிலேயே குறிப்பிடுவார்கள்.

இப்படிப்பட்ட தண்டனையைக் கணக்கிடுவதற்கு இந்திய தண்டனைச் சட்டம் 1860 - இன் பிரிவு 65 ஆனது ஓர் அறிவுறுத்தலை விடுக்கிறது. இதன்படி, அபராதம் செலுத்த தவறினால், விதிக்கப்பட்ட உச்சகட்ட தண்டனையில் நான்கில் ஒரு பங்கிற்கு மேல் விதிக்க முடியாது. சட்டமே சரியாக தெரியாத நீதிபதிகளுக்கு இந்தக் கணக்கு சூத்திரமெல்லாம் எப்படி தெரியும்?

ஆதலால், சட்டப்படி ஒன்றரை மாதமாக கொடுக்க வேண்டிய தண்டனையைச் சட்டத்துக்குப் புறம்பாக இரண்டு மாதமாக கொடுத்தார்கள். இத்தீர்ப்பின் நகல் எனது கை வசம் உள்ளது.

இந்த இடத்தில் மேற்கண்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நியாயமானதா என்பது குறித்து நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம்.

அண்ணாமலை பல்கலை கழக மாணவர் நாவரசு கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட ஜான் டேவிட்டுக்குச் சிதம்பரம் அமர்வு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததும், சென்னை உயர்நீதிமன்ற மேல் முறையீட்டில் ஜான் டேவிட் விடுதலை செய்யப்பட்டதும், பின் கடந்த சில மாதங்களுக்குமுன் உச்சநீதிமன்றம் ஜான் டேவிட்டைக் குற்றவாளி என அறிவித்ததும், அதனைத் தொடர்ந்து குற்றவாளி கடலூர் மத்திய சிறையில் சரணடைந்து, சிறை தண்டனையை அனுபவித்து வருவதும் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறது அல்லவா!?

சென்னை உயர்நீதிமன்றம், குற்றவாளி ஜான் டேவிட்டை விடுதலை செய்தது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் விளக்கம் கேட்டு விடுதலை செய்த நீதிபதிகளுக்குச் சட்டப்படியான அறிவிப்பை (நோட்டீஸ்) அனுப்பியது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் என்ற வகையில்தான் தண்டனை வழங்கப்பட்டது. எப்படி இருக்கிறது பாருங்கள் இந்திய நீதிபதிகள் அடிக்கும் கூத்து?

ஒருவர் மீது சட்டப்படி குற்றம் சாற்றுவதும், அதனைச் சட்ட முறைப்படி விசாரணை செய்து சூழ்நிலைக்குத் தக்கவாறு சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைத்தோ அல்லது அதிகபட்சமாகவோ கொடுக்கவே உரிமையிருக்கிறது. இதனைக் கோரும் உரிமை இந்திய சாசன கோட்பாடு 21-இன் கீழ் அடிப்படை உரிமையாக ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அல்லது மகளுக்கும் இருக்கிறது.

ஆனால், இந்த முட்டாள்களோ தங்களின் சட்ட அறிவின்மையாலும், தாங்கள் வைத்ததே சட்டம் என்பது போலவும் இஷ்டம் போலவும் தீர்ப்பு வழங்குகிறார்கள். இந்திய தண்டனைச் சட்டம் என்பது நான், உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக முன் மொழிந்துள்ள அடிப்படையான ஐந்து சட்டங்களில் மூன்றாவதாகும். அப்படியான சட்ட அறிவே இல்லாத இவருக்கு வேறு என்ன சட்ட அறிவு இருக்க முடியும்?.

ஒருவர் தனது சுய உழைப்பின் மூலம் சம்பாதித்த சொத்தை, அவர் விருப்பப்படும் எவருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதனை எனக்குத்தான் கொடுக்க வேண்டும் என அவருக்குப் பிறந்த வாரிசு உட்பட எவரும் உரிமை கோர முடியாது. ஆனால், சூழ்நிலைக்கு ஏற்ப அடிப்படை தேவையான உணவை(ஜீவனாம்சத்தை)க் கேட்பதற்கு பெற்றோர்களிடத்தில் அவர்களின் வாரிசுகளுக்கும், வாரிசுகளிடத்தில் அவர்களின் பெற்றோர்களுக்கும் உரிமையுண்டு.

இதுபோல, மனைவி மட்டுமே கணவனிடம் ஜீவனாம்சம் கோர முடியும் என்பதாக பலரும் தவறாக நினைக்கிறார்கள். ஆம்! கணவனும் சம்பாதிக்கும் மனைவியிடம் இருந்து ஜீவனாம்சம் கோர முடியும் என்பது பலருக்கும் தெரியாத விடயம்.

இது குறித்த விரிவான விபரங்களை நான் உங்களுக்கு முன் மொழியும் அடிப்படையான ஐந்து சட்டங்களில் நான்காவதான குற்ற விசாரணை முறை விதிகள் 1973-இன் விதிகள் 125 முதல் 128 வரையிலான விதிகளில் நீங்கள் அறியலாம்.

கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனுமே முதல் வாரிசுகள். பின்தான் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வாரிசுகள் ஆவார்கள். இதன் பின்னரே பேரக்குழந்தைகளும் வாரிசுகள் ஆவார்கள்.

எனவே, திருமணமான ஆண் அல்லது பெண் தனது சொத்து குறித்து உயில் எதுவும் எழுதாமல் இறந்து விட்டால், அது அவரின் வாரிசுகளுக்குத்தான் சென்றடையுமே தவிர, பெற்றோர்களுக்கு அல்ல.

விதி விலக்காக, திருமணமான ஒரு பெண், இயற்கையான முறையில்லாமல் ஏழு வருடத்திற்குள் இறக்க நேரிட்டால் அப்பெண் நிச்சயமாக வரதட்சிணை கொடுமை காரணமாகவே இறந்ததாக கருதி அவளது திருமணத்தின் போது அணிவித்த உடைமைகள் அப்பெண் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கே போய்ச் சேரும். அப்படி பிள்ளை ஏதும் இல்லாத போது, அவளது பெற்றோரிடம் திரும்ப ஒப்படைக்க  வேண்டும் என மணக்கொடை தடுப்புச் சட்டம் 1961 இன் பிரிவு 6(3) இல் சொல்லப்பட்டுள்ளது.

ஆம்! திருமணமான ஒரு பெண் ஏழு வருடத்திற்குள் இறக்க நேரிட்டால் அப்பெண் நிச்சயமாக வரதட்சிணை கொடுமை காரணமாகவே இறந்ததாக கருத வேண்டும் என இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 மற்றும் இந்திய சாட்சிய சட்டப்பிரிவு 113 ஆகியவற்றில் திருத்தமாக புகுத்தியிருக்கிறார்கள். எந்த ஆய்வின்படி இப்படியொரு அனுமானத்தைச் சட்டத்தில் புகுத்தியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

ஏனெனில், ஏழு வருடத்திற்கு முன்பாக பெண் இறப்பதற்கு வரதட்சிணை அல்லாத எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அதுபோலவே, ஏழு வருடத்திற்குப் பின் இறப்பதற்கு வரதட்சிணையும் காரணமாக இருக்கிறது.

மணக்கொடை தடுப்புச் சட்டம் 1961 ஆனது இந்து, இஸ்லாமியர், கிறித்துவர் என அனைத்து மதங்களுக்கும் பொதுவானதும், பொருந்துவதும் ஆகும். இம்மும்மதத்தினருக்கும் ஆன வரதட்சிணை, சொத்து, "பாகப்பிரிவினை குறித்து சட்ட அறிவுக்களஞ்சியம்" என்ற நூலில் போதுமான தகவலைக் கொடுத்துள்ளேன். இந்நூலை பெற திரு.அய்யப்பன் என்பவரை +919150109189 என்ற உலாப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சொத்துக்காக கொலை நடந்ததாக கேள்விப்பட்டுள்ளோம் அல்லவா? உண்மையில், இந்து வாரிசு உரிமை சட்டம் 1956 இன் பிரிவு 25 இன்படி, சொத்துக்காக ஒருவர் கொலை செய்தால், கொலை குற்றவாளி ஆவதுடன், சொத்தைக் கோருவதற்கான உரிமையையும் இழக்கிறார். இதேபோல, சிறப்பு திருமண சட்டம் 1954 இன்படி காதல் பதிவு திருமணம் செய்பவர்களும் வாரிசு என்கிற பூர்வீக சொத்துரிமையை இழக்கிறார்கள்.

எனவே, நீதிபதி பிரபா ஸ்ரீதேவனின், "திருமணமான பெண் ஒருவர், தமக்கு குழந்தை இல்லாத நிலையில், உயில் எழுதாமல் இறக்க நேரிட்டால், அவரது வங்கி சேமிப்பு உள்ளிட்ட சொத்துக்களுக்கு, அவரது கணவரும், அவரைச் சார்ந்த உறவினரும்தான் உரிமை கொண்டாட முடிகிறது. அச்சொத்துக்களைக் கேட்க, அப்பெண்ணின் பெற்றோருக்கோ, உறவினருக்கோ உரிமை தரப்படவில்லை. இதுகுறித்த ஒரு வழக்கில், 'இந்து சொத்துரிமை சட்டத்தில் இப்படித் தான் சொல்லப்பட்டுள்ளது' என, உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது'' என்கிற கருத்து அடிப்படை சட்ட அறியாமையே ஆகும்.

உச்சநீதிமன்றத்துல கூட தீர்ப்பு சொல்லிட்டாங்களாம்! உச்சநீதிமன்றத்துல இருக்கிறவங்களும் இவரைப் போன்ற அறிவிலிகள்தானே? பின்ன சொல்லாம என்ன செய்வாங்க!

நான் குறிப்பிட்டுள்ள சங்கதிகளுக்கு ஆதாரமாக அதற்குரிய சட்டப்பிரிவுகளைக் குறிப்பிட்டுள்ளது போன்று, அவரும் சட்டப்பிரிவைக் குறிப்பிட்டு இருந்தால் நாம் சரி பார்க்கலாம். ஆனால், அப்படி ஏதுவும் குறிப்பிடவில்லையே ஏன்? அப்படியொரு சட்டம் இருக்கவே வாய்ப்பில்லாத போது எப்படி குறிப்பிட முடியும்?!

நீதிபதிகள் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் தீர்ப்பு சொல்லாமல், தான் வைத்ததே சட்டம் என்று தான்தோன்றித்தனமாக நடக்கிறார்கள் என்பதே எனது குற்றச்சாட்டு. இவர்களைப் போன்ற பல பெண் முட்டாள்களின் அறிவுரையைக் கேட்டு, வாழ்க்கை இழந்து நிற்கும் பெண்கள்தாம் அய்யோ பாவம்.

Comments  

 
+1 # Mohamed Usmanm 2012-01-28 11:55
Dear Bala.,

Unkalin Vilakkathukku Romma Nanri. Intha Police seiyum Arrestkal ellam sarithana ? Illai ivarkalukku intha Vanalava Athikaram Kodukka pattirukkirtha ? Atai parrti ethavatu eluthungalen.

Nanrii

MOHAMED USMAN
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Warrant Balaw - Law Researcher, Writer 2012-01-30 20:02
Quoting Mohamed Usmanm:
Dear Bala.,

Unkalin Vilakkathukku Romma Nanri. Intha Police seiyum Arrestkal ellam sarithana ? Illai ivarkalukku intha Vanalava Athikaram Kodukka pattirukkirtha ? Atai parrti ethavatu eluthungalen.

Nanrii

MOHAMED USMAN


முகமது உஸ்மான் அவர்களே வணக்கம்.
இத்தளத்தின் கட்டுரைப் பகுதியில் நீதியைத்தேடி... தலைப்பில் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவைகளை தாங்கள் படிக்கவில்லை என தெரிகிறது. யாருக்கும் வானலாவிய அதிகாரம் கிடையாது. நியாயம்தான் சட்டம். எனவே, சட்டம் தெரிந்தால் எவர் செய்யும் தவறையும் தட்டிக் கேட்க முடியும். அடிப்படையான சட்ட விழிப்பறிவுணர்வை பெற நான் எழுதியுள்ள ஐந்து நூல்களை படிக்கலாம். தேவைக்கு திரு.அய்யப்பன் என்பவரை +919150109189 என்கிற உலாப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்!
பதில் | Reply with quote | Quote
 
 
0 # g.chandrasekaran 2012-01-30 22:15
Dear W. Bala!

Kudos to you.

We need such fearless persons.. this is the need of the hour.

with regards

G.Chandrasekaranm
பதில் | Reply with quote | Quote
 
 
0 # கார்பன் கூட்டாளி 2012-02-04 13:51
we encourage your work.

thank u.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # மகிபாலன் 2012-02-21 10:53
ஒரு நீதிபதியைச் சட்ட அறிவே இல்லாதவர் எனக்கூறுவது ரொம்ப ஓவராக தெரிகிறது. இங்கே சட்ட ஆராய்ச்சியாளர் என அறிமுகப்படுத்தப்படும் பாலா, சட்டம் படித்தவரா? இந்நேரம்.காம் தெளிவுபடுத்த வேண்டும். நீதிபதிகளை அவமதிக்கும்படியான இத்தகைய உளறல்களை வெளியிடுவதை இந்நேரம் நிறுத்திக்கொள்ளவேண்டும். இல்லையேல் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Warant Balaw - Law Researcher, Writer, Critic 2012-02-22 01:47
Quoting மகிபாலன்:
ஒரு நீதிபதியைச் சட்ட அறிவே இல்லாதவர் எனக்கூறுவது ரொம்ப ஓவராக தெரிகிறது. இங்கே சட்ட ஆராய்ச்சியாளர் என அறிமுகப்படுத்தப்படும் பாலா, சட்டம் படித்தவரா? இந்நேரம்.காம் தெளிவுபடுத்த வேண்டும். நீதிபதிகளை அவமதிக்கும்படியான இத்தகைய உளறல்களை வெளியிடுவதை இந்நேரம் நிறுத்திக்கொள்ளவேண்டும். இல்லையேல் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


நண்பரே, நான் அடிப்படையில் ஒரு வெல்டர் ஆவேன். பள்ளியில் மேல்படிப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். படிப்புக்கும், அறிவுக்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால், இந்த அடிப்படை விடயம் கூட தெரியாத தாங்கள், ‘‘நான் சட்டம் படித்தவரா’’ என வினவியுள்ளீர்கள்.

படித்தவர்கள்தான் ஆராய்ச்சியாளராக முடியும் என எந்தச் சட்டம் சொல்கிறது என உங்களால் சொல்ல முடியுமா?

உலக பொதுவுடைமைவாதியாம் நமது திருவள்ளுவப் பாட்டன் உட்பட, பல செயற்கறிய கண்டு பிடிப்புகளை கண்டு பிடித்த அறிஞர்கள், மேதைகள் எல்லாம் எந்த பல்கலை கழகத்தில் படித்தார்கள் என சொல்ல முடியுமா?

போதுமான, சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாத தங்களைப் போன்றவரால், சட்டத்தைப் பற்றியும், தீர்ப்பின் குறைகளைப் பற்றியும் பேசவோ, எழுதவோ முடியுமா என்றால், நிச்சயமாக முடியாதுதான். ஆனால், என்னால் முடியும்.

எப்படியெனில், உங்களைப் போல நான் எந்த யுனிவர்சிட்டியிலும் (University) படித்தவன் அல்ல. மாறாக, யுனிவர்சில் (Universe) உணர்ந்தவன்.

அதனால்தான், இப்படிப்பட்ட சட்ட விழிப்பறிவுணர்வுக் கடமைப் பொறுப்பை பண்பட்டு ஏற்றுக் கொண்டுள்ளேன்.

இங்கு, அடிப்படைச் சட்ட அறிவு அறவே இல்லாத நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் எந்த வழக்கில் என்ன மாதிரி சட்டத்தவறு செய்துள்ளார் என்பதை தெளிவாக குறிப்பிட்டு உள்ளேன்.

உங்களது வேலை இது தவறு என்பதை ஆதாரப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் நிருபிக்க வேண்டியதுதானே தவிர, முட்டாள் நீதிபதிக்கு வக்காலத்து வாங்கும் விதமாக, என் / எங்களின் மீது வழக்கு போடுவேன் என மிரட்டுவதோ / பூச்சாண்டி காட்டுவதோ அல்ல. அறிவு வறுமை மிக்க உங்களின் மிரட்டல் / பூச்சாண்டி காட்டுதலுக்கு எல்லாம் நான் பயப்படுகிறவனோ / நாங்கள் பயப்படுகிறவர்களோ அல்ல.

எனது பத்து வருட சட்ட ஆராய்ச்சியில், Quote:
இந்தியாவில் உள்ள கீழ் நீதிமன்ற நீதிபதிகள் முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை முட்டாள்களே!
என்பதைத்தான் எனது ஐந்து நூல்களிலும் ஆதாரப்பூர்வமாக வழக்கு எண் மற்றும் நீதிபதிகளின் பெயருடன் நிறுவியுள்ளேன்.

தேசத்தந்தை மகாத்மா காந்தி வக்கீல் தொழிலையும், வக்கீலாய் இருந்து நீதிபதிகளான நீதிபதி பதவியையும், "விபச்சாரத்திற்கு இணையானது" என அவரது இந்திய சுயராஜ்யம் நூலின் 11-வது கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார்.

பகுத்தறிவு தந்தை பெரியார், தனது 10-08-1931 தேதியிட்ட குடியரசு நாளிதழில், நாட்டில் நிலவும் சீர்கேடுகள் அனைத்திற்கும் வக்கீல்களே காரணம் என குறிப்பிட்டு உள்ளதோடு, வக்கீல்களை "ஆண் விபச்சாரிகள்" என்று அவருடைய அகராதியில் கூறியுள்ளார்.

எனவே, இது போன்ற மிரட்டல்களை தவிர்த்து சட்டத்தை தெளிவாக படித்து, சரியாக பயன்படுத்த அறிவுறுத்துகிறேன். இந்த அறிவுரைகளை எல்லாம் மீறி, வழக்கு எடுக்க தைரியம் இருந்தால் எடுக்கலாம். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி!
பதில் | Reply with quote | Quote
 
 
0 # mokkibolo 2012-02-21 17:01
மகி பாலா... எத்தனை நீதிபதி யோக்கியர்னு சொல்லமுடியுமா.. 100 ல 10 பேர் நல்லவங்கள் இருப்பாங்கள். மீதி எல்லாரும் (அ)யோக்கியங்கள்.. இல்லனா.. 2ஜி கேஷ்ல ராஜா உள்ளே இருக்கிரப்போ... ப. சி. மற்றும் வெளியே... யோசிங்க மக்களே...
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Warant Balaw - Law Researcher, Writer, Critic 2012-02-22 01:38
Quoting mokkibolo:
மகி பாலா... எத்தனை நீதிபதி யோக்கியர்னு சொல்லமுடியுமா.. 100 ல 10 பேர் நல்லவங்கள் இருப்பாங்கள்


நண்பரே, வக்கீல்கள் அல்லது நீதிபதிகளில் நல்லவர்கள் என எவராவது இருப்பின், அது அவர்கள் சாதாரண மனிதர்கள் என்கிற நிலைதானே அன்றி வேறில்லை என்பது தேசத்தந்தை மகாத்மாவின் கருத்து.

மகாத்மாவாலேயே ஏற்க முடியாத வக்கீல்களை, நீதிபதிகளை என்னால் / நம்மால் எப்படி ஏற்க முடியும்?

நீதித்துறையில் ஒரு குறிப்பிட்ட அளவிலாவது நல்லவர்கள் இருக்கிறார்கள் என்ற மன நிறைவுக்கு நான் வந்திருந்தால், நானும் நீதிபதியாகியிருப்பேன்.

அப்படி ஒருவரும் இல்லையென்பதால்தான், இப்படி சட்ட விழிப்பறிவுணர்வூட்டும் கடமையைச் செய்து கொண்டு இருக்கிறேன்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # ராகம் தாளம் 2012-02-23 18:15
இதை விட பெரிய கொடுமை என்னவெனில் கீழ் கோர்ட்டு கொடுத்த தீர்ப்பை தவறு என்று கூறிவிட்டு, கீழ் கோர்ட்டு சரியாக தன் மனதை செலுத்தாமல் தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் குறிப்பிடுவார்கள். ஆனால் அந்த நீதிபதிகளுக்கு தண்டனை ஏதும் கிடையாதாம்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Warant Balaw - Law Researcher, Writer, Critic 2012-02-24 12:22
Quoting ராகம் தாளம்:
இதை விட பெரிய கொடுமை என்னவெனில் கீழ் கோர்ட்டு கொடுத்த தீர்ப்பை தவறு என்று கூறிவிட்டு, கீழ் கோர்ட்டு சரியாக தன் மனதை செலுத்தாமல் தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் குறிப்பிடுவார்கள். ஆனால் அந்த நீதிபதிகளுக்கு தண்டனை ஏதும் கிடையாதாம்.


நண்பரே, உங்களின் கேள்வி சட்டப்படி மிகவும் சரியானதே!

இந்திய தண்டனைச் சட்டம் 1860-இல் 11-வது அத்தியாயம் பொய் சாட்சியம் கூறுதல், பொது நீதிக்கு முரணான குற்றங்கள் பற்றி விவரிக்கிறது.

இதன் பிரிவு 219-இன்படி, தம்மால் வெளியிடப்படும் அல்லது அளிக்கப்படும் ஓர் அறிக்கை உத்தரவு, தீர்ப்பு அல்லது முடிவு சட்ட விரோதமானது என்று அறிந்தும் அதனை சொந்த விரோதத்தின் காரணமாக அல்லது லஞ்சம் பெற்றுக் கொண்டதற்காக வெளியிடுவது அல்லது அறிவிப்பது குற்றமாகும். அதற்காக ஏழாண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.

ஆனால், நீதிபதிகளின் சாதிப்பற்று காரணமாக இதுவரை ஓரு நீதிபதிக்கு கூட, இப்பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்பட்டதில்லை.

எனவேதான், நீதிபதிகள் மீதான விசாரணையை நீதிபதிகளே விசாரிப்பது தவறு என்றும், இதற்கு என ஏழு நபர்களைக் கொண்ட அரசு சாராத தன்னார்வலர்களை கொண்ட குழுவை நியமிக்க வேண்டும் என, எனது இரண்டாவது நூலில் வலியுறுத்தியுள்ளேன்.
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: